தூத்துக்குடி, டிச. 21 அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் ஸ்தாபக தலைவரும் பெண் உரிமை போராளியுமான பாப்பா உமாநாத் அவர்களின் 11ம் ஆண்டு நினைவுதின கருத்தரங்கம் தூத்துக்குடியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் 17ம் தேதியன்று நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஆர்.விஜயலெட்சுமி தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் எம்.கமலம் வரவேற்புரையாற்றினார். மாவட்ட துணை தலைவர் டி.கலைச்செல்வி, மாவட்ட பொருளாளர் எஸ்.ராம லெட்சுமி முன்னிலை வகித்தனர். திண்டுக்கல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலபாரதி, மாவட்ட செயலாளர் பி.பூமயில் ஆகியோர் உரையாற்றினர். மாவட்டக்குழு உறுப்பினர்கள் உலகமணி, செல்வி, கலைச்செல்வி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பெண் குழந்தைகள், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராகவும், போதை பழக்கத்திற்கு எதிராகவும், 2019ம் ஆண்டு சென்னை கோட்டை நோக்கி 400 கி.மீ நடைபயணத்தில் கலந்து கொண்ட சகோதரிகளை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலபாரதி அவர்கள் பொன்னாடை அணிவித்து கௌர வித்தனர். புறநகர செயலாளர் பி.சரஸ்வதி நன்றி கூறினார்.