தூத்துக்குடி, ஜன.11- தூத்துக்குடி திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் தூத்துக்குடி மாவட்ட சைபர் குற்றப் பிரிவு சார்பாக மாணவ, மாணவியருக்கு சமூக வலை தள குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன் முன்னிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக் குமார் தலைமையில் நடைபெற்றது. அப்போது மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் பேசுகையில், சமூக வலை தளங்களில் ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகளை விளையாடுவதை தவிர்க்க வேண்டும், இதில் பணத்தை இழந்து அதிகம் பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதை நீங்கள் நாளி தழ்களில் படித்திருப்பீர்கள், அதே போன்று சமூக வலைதளங்களை பயன் படுத்தும் போது அதில் தெரியாத நபர்களி டமிருந்து குறுஞ்செய்திகளுக்கு பதில் அளிக்க கூடாது, பெண்கள் தேவை யில்லாமல் தங்கள் புகைப்படம் மற்றும் சுயவிபரங்களை சமூக வலைதளங்க ளில் பதிவேற்றம் செய்வதை தவிர்க்க வேண்டும். இளைஞர்கள் போதை பழக்க வழக்கங்களுக்கு அடிமையா காமல் இருக்க வேண்டும். கல்வியோடு கூடிய ஒழுக்கத்தையும் கற்று பெரிய வெற்றியாளர்களாக மாறி சமூகத்தில் சிறந்தவர்களாக திகழ வேண்டும் என்றார்.