districts

அதிமுகவினர் கடும் அமளி: பேரவைத் தலைவர் எச்சரிக்கை

சென்னை,மார்ச் 18- தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் பி.டிஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்யத் தொடங்கிய உடன், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தாம் எழுதி வந்த உரையை, பேரவைத் தலைவரின் அனுமதியின்றி நீண்ட நேரம் வாசித்துக் கொண்டே இருந்தார். உரையை நிறுத்திய அமைச்சர்! அப்போது பேரவைத் தலைவர், பட்ஜெட் தாக்கல் செய்த பின்னர், பேச வாய்ப்பளிப்பதாக கூறினார். இருப்பினும் எடப்பாடி தொடர்ந்து அந்த உரையை வாசித்துக்கொண்டே இருந்தார். இதனால், பட்ஜெட் உரையை தொடரமுடியாமல் நிறுத்திய நிதியமைச்சர் தனது இருக்கையில் அமர்ந்தார். சிறிது நேரத்தில் மீண்டும் அமைச்சர் தனது உரையை தொடங்கினார். அப்போது அதிமுகவினர், அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பிக்கொண்டே அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். பட்ஜெட் உரையின்போது மரபை மீறிய எதிர்க் கட்சித் தலைவர் மற்றும் அதிமுக உறுப்பினர்களுக்கு பேரவைத் தலைவர் மு. அப்பாவு கடும் கண்டனம் தெரிவித்தார்.