districts

ஏப்.30 மதுரையில் கூட்டுறவு ஊழியர் கோரிக்கை மாநாடு

மதுரை, மார்ச் 27-  தமிழ்நாடு கூட்டுறவு சங்க ஊழியர் சம்மேளன (சிஐடியு) மாநில நிர்வாகக்குழு கூட்டம் சம்மேளன மாநிலத்  தலைவர் ஆ. கிருஷ்ணமூர்த்தி தலைமையில் மதுரையில் ஞாயிறன்று  நடைபெற்றது.  சம்மேளன பொதுச் செயலாளர் என்.ஆர்.ஆர்.ஜீவானந்தம், சம்மேளன செயல் தலைவர் இரா.லெனின், சிஐடியு மாநில துணைப் பொதுச் செயலாளர் கே ஆறுமுக நயினார். ஆகியோர் பங்கேற்றனர்.    இதில் கூட்டுறவு சங்க ஊழியர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும். கோரிக்கைகளை விளக்கி தமிழகம் முழுவதுமிருந்து ஊழியர்கள் பங்கேற்கும் வகையில் கோரிக்கை மாநாடு வரும் ஏப்ரல்  30 அன்று மதுரையில் நடத்திட தீர்மானிக்கப்பட்டது . ஊழியர்களின் நீண்டகால கோரிக்கையான ஒவ்வூதிய திட்டத்தை அரசு உருவாக்கி ஊழியர்களுக்கு ஓய்வூதியம் மாதம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும்.  பொது விநியோகத் திட்டத்தினை தனித் துறையாக உருவாக்கிட வேண்டும் . ஒன்றிய அரசு உருவாக்கிவரும் கூட்டுறவு சட்ட திருத்தம் கூட்டுறவு அமைப்பை சீர்குலைப்பதுடன் அரசின் உரிமைகளை பறித்திடவும் . சாதாரண ஏழை எளிய மக்களின் சேமிப்பு பணத்தை மடைமாற்றம் செய்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கிட எடுக்கப்படும் நடவடிக்கையினை நிறுத்த வேண்டும்.  ஆவின் நிர்வாகங்களின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளனம் வன்மையாகக் கண்டிப்பதுடன், நீதிமன்ற உத்தரவுப்படி மேற்படி பணியாளர்களை உடனடியாக பணியில் சேர்க்க வேண்டும்.   விதிப்படி வாக்காளர் பட்டியல்  தயாரிக்கப்படும் வரையில் கூட்டுறவு நிறுவனங்களின் தேர்தலை தள்ளிப்போடவும் குழுவின் இடத்தில் கூட்டுறவுத் துறை அதிகாரிகளை செயலாட்சியர்களாக நியமித்திடவும் முயற்சி நடப்பதாக தெரிகிறது . இது கூட்டுறவு நிறுவனங்களில் ஜனநாயத்தை வளர்த்திட உதவி செய்யாது . எனவே நிர்வாகக்குழு பதவி காலம் முடிவடையும் அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும் உடனடியாக ஜனநாயகபூர்வமாக தேர்தலை நடத்திட வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.