districts

img

ராஜகம்பீரத்தில் மாணவர்களுக்கு பாராட்டு விழா

சிவகங்கை, ஜன.7- சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகா ராஜ கம்பீரத்தில் திருப்போனத்தார் அறக்  கட்டளை சார்பாக மூன்றாவது ஆண்டு விழா,  மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.  விழாவிற்கு ராஜகம்பீரம் ஊராட்சி மன்ற  தலைவர் முசிப்ரஹ்மான் தலைமை வகித்தார்.  அறக்கட்டளையின் நிறுவனர் முனைவர் ஜெ. சதக்கத்துல்லாஹ் வரவேற்று பேசினார். இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே. நவாஸ் கனி சிறப்புரையாற்றினார். மானா மதுரை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் லதாஅண்ணாத்துரை,ஒன்றிய கவுன்சிலர் அண்ணாத்துரை, காங்கிரஸ் மாவட்ட பொறுப் பாளர் முருகேசன், மானாமதுரை ஒன்றிய விவ சாயிகள் சங்க பொருளாளர் காசிராஜன், ஒன்றி யக் குழு உறுப்பினர் ஆகியோர் பேசினர். அறக்கட்டளை நிறுவனர் சதக்கத்துல்லாஹ்  பேசுகையில், மானாமதுரை அருகே ராஜ கம்பீ ரத்தில் அரசு தேர்வு இலவச பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது .இங்கு நூலகம் அமைக்  கப்பட்டுள்ளது .அரசு போட்டி தேர்வுக்கான அனைத்து புத்தகங்களும் உள்ளன.  இலவச  பயிற்சியும் ஏழை மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. 10 மற்றும் பிளஸ் -2 வகுப்பு பொதுத்தேர்வில்  அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள் பாராட்டப் பட்டனர். பெண்களுக்கு வீட்டிலிருந்தே சம்பா திப்பதற்காக கம்ப்யூட்டர், தொழில் வாய்ப்புகள் பற்றிய பயிற்சி அளிக்கப்படுகிறது. பள்ளி மாண வர்களுக்கு மாலை நேர இலவச டியூசன் நடத்தப்படுகிறது. ஆங்கில பேச்சு பயிற்சியும் நடைபெறுகிறது. கல்வி தொலைக்காட்சி இலவச இன்டர்நெட் வசதியுடன் கம்ப்யூட்டர் மைய மும் உள்ளது என்று தெரிவித்தார்.