districts

img

நல்லாசிரியர்களுக்கு பாராட்டுவிழா

திண்டுக்கல், செப்.9- திண்டுக்கல்லில் மதர் தெரசா லயன்ஸ் கிளப் சார்  பில் விருது பெற்ற நல்லாசிரி யர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.  இந்நிகழ்ச்சிக்கு சங்கத் தின் தலைவர் எம்.பிரபா கரன் தலைமை வகித்தார். பொருளாளர் காஷ்மீர் அருண்  முன்னிலை வகித்தார். ஆசி ரியர் ஏ.எஸ்.ஏ.சாமி வர வேற்றார். செயலாளர்கள் சைலேந்திரராய், மணிப் பாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.  அதிமுக முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான திண்டுக் கல் சி.சீனிவாசன் நல்லாசிரி யர் விருது பெற்ற எஸ்.சித்தி ரக்குமார், மாநில அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ச. பாலாஜி, ரா.இலட்சுமி, இ. பாலசுப்ரமணியம், அ. ஜான்சிமேரி சமாதானம், மு. மகேஷ்வரன், என்.பெரிய சாமி, பா.பால்பாண்டியன், க.இராமு, சு.பார்வதி ஆகி யோரை கௌரவித்தார்.  சமூக ஆர்வலர் என்.எம்.பி.காஜாமைதீன் பரிசு களை வழங்கினார். முன்  னாள் மண்டலத் தலைவர் என்.நாகராஜன், மண்டலத் தலைவர் வி.ராஜா, வட்டா ரத் தலைவர் ஏ.குமார், முன்  னாள் தலைவர் வில்லியம்  உட்பட பலர் பங்கேற்றனர். நிகழ்வில், ஏழை பெண்க ளுக்கு தையல் இயந்திரங் கள், முதியோர் இல்லங்க ளுக்கு 10 மூட்டை அரிசி உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன.