அருமனை, ஜூன்.26 - உலக போதை விழிப்புணர்வு தினத்தையொட்டி ஞாயி றன்று காலை கன்னியாகுமரி மாவட்டத்தில் 21 இடங்களிலி ருந்து தொடர் ஜோதி ஓட்டம் நடைபெற்றது. அன்று மாலை யில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் தொடர் ஜோதி ஓட்டம் வந்து சேர்ந்தவுடன் நிகழ்சிகள் நடை பெற்றன. அருமனை சந்திப்பிலிருந்து துவங்கிய தொடர் ஜோதி ஓட்டத்தை பேரூராட்சித் தலைவர் வி.எம்.லெதிகா மேரி, மாவட்ட பேரூராட்சிகளின் துணை இயக்குனர் விஜயலட்சுமி ஆகியோர் துவக்கிவைத்தனர். இந்நிகழ்சியில் பேரூராட்சி ஊழியர்கள், வார்டு கவுன்சிலர்கள் மற்றும் அருமனை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெயக்குமார் உட்பட ஏரா ளமானோர் பங்கேற்றனர்.