districts

img

முனைவர் தி.ராஜ்பிரவினுக்கு தோட்டக்கலை ஆராய்ச்சி விருது

கோவை, ஜூலை 16- அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் இணை பேராசிரியர் முனைவர் தி.ராஜ்பிரவினுக்கு சிறந்த தோட்டக்கலை ஆராய்ச்சிக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. கோவையிலுள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், மெட்ராஸ் வேளாண் மாணவர் மன்றத்தின் சார்பில் 112 ஆவது அமைப்பு நாள் மற்றும் வேளாண்துறை சாதனையாளர்க ளுக்கும், மாணவர்களுக்கும் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி அண்ணா பல் கலைக்கழக அரங்கில் நடைபெற்றது.  இந்நிகழ்விற்கு தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் வெ.கீதாலட்சுமி தலைமை வகித்தார்.  பாரதிய வித்யா பவன் கல்வி நிறுவ னங்களின் தலைவர் பி.கே.கிருஷ்ண ராஜ் வானவராயர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று விருதுகளை வழங்கினார்.  தோட்டக்கலைத்துறையில் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கி, விவசாயிகளுக்கு அதிகளவு உற்பத்தி திறன் மற்றும் லாபம் பெற உதவியாக இருந்து வரும் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் இணை பேராசிரியர் தி.ராஜ்பிரவினுக்கு சிறந்த தோட்டக்கலை ஆராய்ச்சிக்கான வீ.சி.வெள்ளியங்கிரி கவுண்டர் விருது வழங்கப்பட்டது. அண்ணா பல்கலைக்கழக கிரா மப்புற விரிவாக்கப் பணி வாயிலாக, ஜம்மு மாநிலத்தின் வேளாண் துறை யுடன் இணைந்து, கடலோர தமிழ கத்தில் வெற்றிகரமாக கிளாடியோலஸ் வண்ண மலரை நேரடியாக விவசாயி களின் தோட்டத்தில் சாகுபடி செய்த மைக்காக இந்த விருது வழங்கப் பட்டது. மேலும், இந்த மலருக்கு காதல்  மலர் என பெயர் சூட்டி, லாபத்தை  ஈட்டும் வகையில் வெற்றிகரமாக விற்பனை செய்து, விவசாயத்துறை யில் சிறு மற்றும் குறு விவசாயிகள், வணிகர்களுக்கு பொருளாதார ரீதியாக பெரிதாக உதவியதற்கு இந்த விருது வழங்கப்பட்டது. இந்த கிளாடி யோலஸ் மலர் சாகுபடியில் ஊடுபயி ராக நூக்கல் சாகுபடி செய்து விவசா யிகளுக்கு இரட்டிப்பு  பணபலன்கள் மற்றும் குறைந்த நீரில் அதிஅளவு பயிரை சாகுபடி செய்யும் புதிய வேளாண் விரிவாக்க முயற்சிக்கு அவ ருக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன. முனைவர் தி.ராஜ்பிரவின், தீக்கதிர் தமிழ் நாளிதழில் கடந்த 20 ஆண்டு களாக தனது மாணவர் பருவம் முதல் வேளாண் நிலம் மற்றும் பொதுக்கட்டு ரைகள் எழுதி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.