கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் எரியோடு, நவ.9- திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள தொட்டணம்பட்டியில் தமிழ்நாடு அரசு சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு திண்டுக்கல் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர் விஜயகுமார் தலைமை வகித்தார். கால்நடை ஆய்வாளர் சதீஸ்குமார் வரவேற்றார். மருத்து வர் உதவியாளர் அமராவதி நன்றி கூறினார். சிறந்த கலப்பின கன்றுகளுக்கு சிறப்பு பரிசுகளை வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பெருந் தலைவர் சவுடீஸ்வரிகோவிந்தன் வழங்கினார். முகாமில் டாக்டர் சக்திபிரசாத் தலைமையில் கால் நடைகளுக்கு தடுப்பூசி, கருவூட்டல், சினைபரிசேதனை, குடற்பூழு நீக்கம் உள்ளிட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது.