இராஜபாளையம், மார்ச் 27- இராஜபாளையம் நகராட்சி யில் 20.80 சதவீதம் வரி வசூலிக் கப்போவதாக அறிவிப்பு வெளி யிடப்பட்டது. இதையடுத்து இந்தப் பிரச்சனையோடு பல்வேறு கோரிக் கைகளையும் கையிலெடுத்தன சிஐ டியு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங் கம், தென்னை விவசாயிகள் சங் கம், சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி, அறம் அறக்கட்டளை, அன்னை தெரசா நற்பணி இயக்கம், நேதாஜி ரத்ததானக் கழகம், இராஜபாளை யம் முகநூல் நண்பர்கள் குழு, நுகர்வோர் கூட்டமைப்பு ஆகி யவை. உயர்த்தப்பட்டுள்ள வரியை 10 சதவீதமாகக் குறைக்க வேண்டும். வராத தாமிரபரணி தண்ணீருக்கு விதிக்கப்பட்டுள்ள கூடுதல் வரியை முழுமையாக ரத்துச் செய்ய வேண்டும். ஐந்தாண்டுகளாக நீடித்துக் கொண்டிருக்கும் பாதாள சாக்கடை திட்டம் தாமிரபரணி கூட்டுக் குடிநீர்த் திட்டம் ரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்கவேண்டுமென்பவை கோரிக்கைகளில் பிரதானமா னவை. கோரிக்கைகளை நிறை வேற்ற வலியுறுத்தி செவ்வாயன்று இராஜபாளையம் நகராட்சி அலு வலகத்தை முற்றுகையிடப்போவ தாக மேற்கண்ட அமைப்புகள் அறி வித்திருந்தன. இந்தப் போராட் டத்திற்கு பொதுமக்களும் ஆதர வளிக்கத் தயாராக இருந்தனர். இந்த நிலையில் விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வட் டாட்சியர் ராமச்சந்திரன், சட்ட மன்ற உறுப்பினர் தங்கப்பாண்டி யன், நகர் மன்றத் தலைவர் பவித்ரா, நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி, காவல்துறை ஆய் வாளர் சார்லஸ் ஆகியோர் போராட்டக்குழு ஒருங்கிணைப்பா ளர்கள்-மற்றும் உறுப்பினர்களான மாரியப்பன், ராமச்சந்திர ராஜா, மணிகண்டன்,
பீமாராஜா, அப்பாஸ் மந்திரி, ஷாஜகான், ஹரிஹர குமார், பாலகிருஷ்ணன், ஜானகி, முருகானந்தம் ஜெகன், பிரசாந்த், செந்தமிழ், சுப்ரமணியன் ஆகி யோருடன் பேச்சுவார்த்தை நடத்தி னர். இந்தப் பேச்சுவார்த்தையில், மார்ச் 8-ஆம் தேதி நகர்மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நகர்மன்ற தீர்மா னத்தின் படி 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் உயர்த்தப்பட்ட சொத்து வரியில் ஐந்து சதவீதம் முதல் 25 சதவீதம் குறைப்பது. இது தொடர் பான தீர்மானத்தை ஏப்.20-ஆம் தேதி அரசாணையாக வெளியி டப்படும். சொத்து வரி அடிப்படை விகி தத்தை 19 சதவீதத்திலிருந்து 16 சதவீதமாக மாற்றுவதற்கு நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரில் கவனஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து அதை நடைமுறைப்படுத்து வதற்கான பணிகள் மேற் கொள்ளப்படும். வராத தாமிரபரணி தண்ணீ ருக்கு விதிக்கப்பட்டிருந்த கூடு தல் வரியை செலுத்திய அனைவ ருக்கும் அந்தத் தொகை முன் வைப்புத் தொகையாக ஏற்கப் படும். நகராட்சி அதற்கான அறி விப்பை வெளியிடும் என முடிவானது. இதையடுத்து செவ்வாயன்று நடைபெறவிருந்த முற்றுகை தற்காலிகமாக ஒத்திவைக்கப் பட்டுள்ளது.