districts

ஜூன் 10-க்குப் பிறகு பூவந்தியில் மீன் பாசி பொது ஏலம்

சிவகங்கை,மே 21- சிவகங்கை மாவட்டம் திருப்பு வனம் பூவந்தி கண்மாயில் நடைபெற இருந்த மீன் பாசி ஏலத்தை ஜூன் 10 ஆம்  தேதிக்கு பின்பு நடத்த அதிகாரிகள்  எழுத்துப்பூர்வமாக எழுதிக்கொடுத்த னர்.  சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா பூவந்தி கிராமத்தில் உள்ள பொதுப்பணித்துறை கண்மாயில் ரூ. 40 லட்சத்துக்கு செல்ல வேண்டிய மீன்  பாசி ஏலத்தை 40 ஆயிரத்துக்கு முடித்து  முறைகேடு செய்துள்ளதாக பூவந்தி  ஊராட்சி மன்ற தலைவர் விஜயா ஆறு முகம், துணை தலைவர் மகாலிங்கம் ஆகியோர் மாவட்ட ஆட்சித் தலைவரிட மும் பொதுப்பணித்துறை அதிகாரியிட மும் புகார் மனு கொடுத்தனர்.  மேலும் மே 22 அன்று பூவந்தியில் சாலைமறியல் போராட்டம் நடத்த அறி விப்பு செய்தனர்.  இப் போராட்டத்தை  தொடர்ந்து திருப்புவனம் வட்டாட்சி யர் கண்ணன் தலைமையில் பேச்சு வார்த்தை நடந்தது.இப் பேச்சு வார்த்தையில் பொதுப்பணித்துறை  அதிகாரிகள் மோகன்குமார், சுரேஷ்குமார், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் வீர பாண்டி ,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் திருப்புவனம் ஒன்றிய செயலா ளர் அய்யப்பாண்டி ,கரும்பு விவசாயி கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சக்திவேல், பூவந்தி ஊராட்சி மன்ற தலைவர் விஜயா ஆறுமுகம் ,பூவந்தி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மகாலிங்கம், திமுக விவசாய அணித்தலைவர் பன்னீர்செல்வம், பாண்டி, அதிமுக முருகன்,கிங்கினி ஆகியோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஜூன் 10-க்கு பின்பு மீன்பாசி ஏலம் பொது ஏலமாக விடப்படும் என பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதனால் மறியல் போராட்டம் மே 22 நடை பெறாது என சிபிஎம் ஒன்றிய செயலா ளர் அய்யம்பாண்டி தெரிவித்தார்.