மதுரை, டிச.17- மதுரை செல்லூரில் அடுத் தடுத்து கடைகளில் தீ விபத்து ஏற்பட்டு,ரூ. 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன. மதுரை மாநகர் செல் லூர் அகிம்சாபுரம் நான்கா வது தெரு பகுதியில் பொன் னுச்சாமி என்பவருக்கு சொந்தமாக சில்வர் பட்டறை மற்றும் அருகில் சதுரகிரி இனிப்பகம் என்ற கடையும் செயல்பட்டுவந்தது. இந்நிலையில் சனிக்கிழ மையன்று காலை மின்கசிவு ஏற்பட்டு இரு கடைகளிலும் தீப்பற்றியது. கடைகளில் உள்ள மரச்சாமான்கள், இயந்திரங்களிலும் தீப்பற்றி யது. அப்பகுதி பொதுமக்கள் அளித்த தகவலால் சம்பவ இடத்திற்கு வந்த தல்லா குளம் தீயணைப்புத்துறை யினர் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர். இத னால் பெரும் சேதம் தவிர்க் கப்பட்டது. இந்த தீவிபத்தில் இரு கடைகளிலும் சேர்த்து 10 லட் சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன.