districts

img

காற்றில் பறந்த வாக்குறுதி; மறியலுக்கு திரண்ட மக்கள்

மதுரை, ஜூலை 25- மதுரை அருகே சாலை  மறியலுக்கு தயாரான மக்க ளிடம் ஒன்பது மாதத்திற்கு முன்பு என்ன வாக்குறுதியை மாவட்ட நிர்வாகத்தின் சார்  பில் அதிகாரிகள் கொடுத் தார்களோ. அதே வாக்குறு தியை மீண்டும் கொடுத்தனர்.  மதுரை மாவட்டம் உசி லம்பட்டி தாலுகா கருமாத்  தூர் அருகே உள்ள வடக்கம் பட்டி, பாலூத்துப்பட்டி மாயக்  குரும்பன்பட்டி, சமத்துவ புரம் பூச்சம்பட்டி, செட்டிகுளம், வீரம்பட்டி ஆகிய கிராமங்க ளைச் சேர்ந்த மக்கள் பயன்  படுத்தும் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது. இந்தச் சாலையை சீரமைக்க வலி யுறுத்தி திங்களன்று போராட்  டம் நடைபெற்றது. இந்தச் சாலையை சீர மைப்பது குறித்து 2021-ஆம் ஆண்டு செப்டம்பர் 17-ஆம்  தேதி நடைபெற்ற பேச்சு வார்த்தையில், கிராமச் சாலை  கள் நபார்டு மேம்பாட்டுத் திட்  டத்தின் கீழ் ஆறு மாதத்திற்  குள் சாலை சீரமைக்கப்படும் என வட்டாட்சியர் உறுதிய ளித்திருந்தார். கிட்டத்தட்ட ஒன்பது மாதங்  கள் ஆகியும் மாவட்ட நிர்வா கம், ஊராட்சி ஒன்றிய நிர்வா கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலை யில் திங்களன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புற நகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், ஒன்றியச் செயலாளர் வி.பிமுருகன், மாவட்டக் குழு உறுப்பினர்  பி.எஸ்.முத்துப்பாண்டி, விவ சாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஏ.வேல்பாண்டி, ஜெ.காசி, சீ.குருசாமி, சிவ னம்மாள், கிளைச் செயலா ளர்கள் ஆர்.ரவிச்சந்திரன் எம்.முனியாண்டி மற்றும்  அமமுக ஊராட்சி பொறுப்பா ளர் டி.பாண்டியன் உட்பட ஏராளமானோர் சாலை மறிய லுக்கு தயாராகினர்.

பழைய பல்லவியையே  பாடிய அதிகாரிகள்

ஒன்பது மாதத்திற்கு முன் எந்தக் காரணத்தைக் கூறி போராட்டத்தை ஒத்தி வைக்க அதிகாரிகள் கேட்டுக்  கொண்டார்களோ அதே கார ணத்தை திங்களன்று அச்சு  பிசகாமல் பேசினர். ஒன்பது  மாதத்திற்கு முன் ஆட்சிய ரின் கவனத்திற்குக் கொண்டு  சென்று ஆறு மாதத்திற்குள் சாலை சீரமைக்கப்படும் எனக் கூறிய அதிகாரிகள் ஆட்சியரிடம் ஆலோசித்த தாகவும் 15 நாட்களுக்குள் சாலையை சீரமைக்க நட வடிக்கை எடுக்கப்படும் என்ற னர். வழக்கம்போல் சாலை யை முழுமையாக சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை மூலம் மூன்று மாதத்தில் தமிழக அர சின் நிர்வாக ஒப்புதல் பெற்று  நிதி ஒதுக்கீடு செய்து சாலை அமைத்துத் தரப்படும் எனப்  படும் என அதிகாரிகள் உறுதி யளித்தனர். இதையடுத்து போராட்டம் விலக்கிக்கொள் ளப்பட்டது.