districts

மதுரை முக்கிய செய்திகள்

மதுரை மாரத்தான் போட்டியில் பங்கேற்ற  கல்லூரி மாணவர் மயங்கி விழுந்து பலி

மதுரை, ஜூலை 23- மதுரையில் மாரத்தான் ஓட்டப் பந்தய போட்டியில் பங்கேற்ற பொறி யியல் கல்லூரி மாணவர் மயங்கி விழுந்து பலியானார். மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனை மற்றும் மதுரை மாவட்ட மக்கள்  நல்வாழ்வுத் துறை சார்பில் உதிரம் 2023 என்ற தலைப்பில் குருதிக் கொடை விழிப்புணர்வு மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து நான்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மதுரை தியாக ராஜர் பொறியியல் கல்லூரியில் நான்  காம் ஆண்டு பயின்ற தினேஷ்குமார் (21) என்ற மாணவரும் பங்கேற்றார். இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.  மாரத்தான் போட்டியில் பங்கேற்ற பின்பு மேடையின் அருகே உள்ள கழி வறைக்கு சென்ற போது திடீரென மயங்கி விழுந்துள்ளார்.  இதனையடுத்து ஆம்புலன்ஸ் மூலமாக மதுரை அரசு ராஜாஜி மருத்து வமனையில் அவரை சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி தினேஷ் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தல்லாகுளம் காவல்துறையினர் வழக்குப் பதிவு  செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர்.

பெங்களூருவிலிருந்து சிவகாசிக்கு கடத்திய ஒரு டன் குட்கா பறிமுதல்

சிவகாசி, ஜூலை 23- சிவகாசி மீனம்பட்டி பகுதியில் கடந்த வாரம் ரோந்து  பணியில் ஈடுபட்ட தனிப்படை போலீசார் குட்கா பதுக்கிய  செந்தில் என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.  அதில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒரு கும்பல் குட்காவை மொத்த விலையில் விற்பனை செய்வது தெரிய  வந்தது. இதையடுத்து சிவகாசி டி.எஸ்.பி தனஞ்செயன் உத்தரவின் பேரில் குட்கா பதுக்கிய செந்தில் மூலமாக அவரே ஆர்டர் கொடுப்பது போல் தனிப்படை போலீ சார் கர்நாடக கும்பலுக்கு குட்கா ஆர்டர் செய்து 10 ஆயிரம்  ரூபாய் முன்பணமாக செலுத்தியுள்ளது. இதனை நம்பிய  அந்த கும்பல் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஒரு டன் எடை  கொண்ட குட்காவை சிறிய வகை சரக்கு வேனில் ஏற்றிக்  கொண்டு, சொகுசு காருடன் சிவகாசிக்கு வந்தனர்.  அனுப்பன்குளம் சந்திப்பு பகுதியில் காத்திருந்த காவல் ஆய்வாளர் ரமேஷ் ராஜா தலைமையிலான தனிப்படையினர் குட்கா கடத்தி வந்த வேன் மற்றும் காரை மடக்கி பிடித்தனர். இதையடுத்து குட்கா கடத்தி வந்த கர்நாடக மாநிலத்தை சேர்ந்த அப்ரார் முகம்மது ( 33), ஹரிஷ் (29), சாஹில் (43), ஷெரீப் (28), லியாகத் (33) ஆகிய 5 பேரை கைது செய்தனர். மேலும். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனம் மற்றும் காரையும் குட்காவுடன் சேர்த்து பறிமுதல் செய்தனர்.

பள்ளியில் தூக்குப்போட்டு  தொழிலாளி தற்கொலை

கடமலைக்குண்டு, ஜுலை 23- தேனி மாவட்டம், கடமலைக்குண்டு அருகே குமணன்  தொழுவை சேர்ந்தவர் முருகன் (வயது 48). இவரது மனைவி சாரதா. இவர்களுக்கு 20 வயதில் மகனும், 16 வய தில் மகளும் உள்ளனர். இவர்கள்‌ அனைவரும் கர்நாடக  மாநிலம் பெங்களூருவில் தங்கி முறுக்கு தொழில் செய்து  வருகின்றனர்.  கடந்த 3 நாட்களுக்கு முன்பு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த உறவினரை நலம் விசாரிப்பதற்காக முருகன் பெங்க ளூருவில் இருந்து தேனிக்கு வந்தார். பின்னர் சனிக்  கிழமை காலை மருத்துவமனையில் இருந்து சொந்த கிராம மான குமணன்தொழுவிற்க்கு வந்தார். . அப்போது மன முடைந்த நிலையில் காணப்பட்ட முருகன் அவரது உறவினர்கள் யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார். இந்  நிலையில் சனிக்கிழமை மாலை 5 மணியளவில் கும ணன்தொழு அரசு பள்ளிக்கு சென்ற முருகன் அங்கிருந்த  வேப்பமரம் ஒன்றில் தூக்கு போட்டு தற்கொலை செய்து  கொண்டார்.  தகவலறிந்த வந்த மயிலாடும்பாறை போலீசார் முரு கனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு  மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த னர். மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விருதுநகர்: புதிய மின்வாரி செயற்பொறியாளர் நியமனம்

விருதுநகர், ஜூலை 23- விருதுநகர் வட்ட புதிய மின்வாரிய செயற்பொறி யாளராக பொறுப்பு வகித்து வந்த அகிலாண்டேஸ்வரி திருவாரூருக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டார். இதையடுத்து, தூத்துக்குடியில் மின்வாரிய செயற்பொறி யாளராக பணிபுரிந்து வந்த முத்துராஜ், விருதுநகர் வட்ட மின்வாரிய செயற்பொறியாளராக நியமனம் செய்  யப்பட்டுள்ளார்.

ஆண்டிபட்டி அரசு மகளிர் தொழிற்பயிற்சி  நிலையத்தில் ‌மாணவியர் சேர்க்கை

தேனி, ஜூலை 23- ஆண்டிபட்டி அருகே உள்ள அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடப்பாண்டு நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறுவதாக கல்லூரி முதல்வர் சரவணன் தெரிவித்துள்ளார் .  தொழிற்பயிற்சி நிலையத்தில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் ஒரு வருட தையல் வேலை தொழில்நுட்பம் தொழிற் பிரிவிற்கும், 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் கோபா, ஸ்மார்ட்போன் டெக்னீசியன் மற்றும் ஆப்டெஸ்டர் (6 மாத பயிற்சி) மற்றும் இரண்டு வருட பயிற்சிகளான தகவல் தொடர்பு தொழில்நுட்பம் மற்றும் சாதனங்கள் பராம ரிப்பு, ஜவுளி இயந்திர மின்னணுவியல், குளிர்பத னம் மற்றும் தட்பவெட்பநிலை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பவியலாளர் ஆகிய தொழிற்பிரிவு களுக்கும் விண்ணப்பிக்கலாம்.

மணிப்பூர் கொடூரத்தைக் கண்டித்து நாளை தமிழகம் முழுவதும் சிபிஐ போராட்டம்

மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் பேட்டி

மதுரை, ஜூலை 23-  பாஜக ஆளும் மணிப்பூரில் நிகழ்ந் துள்ள கொடூர கொலைச்சம்பவங்களைக் கண்டித்து நாளை தமிழகம் முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போராட்டம் நடைபெறும் என்று கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரி வித்துள்ளார். மதுரையில் ஜூலை 23 ஞாயிறன்று சிபிஐ  மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மணிப்பூரில் பெண்கள் மீதான பாலி யல் தாக்குதல் உலகத்தையே உலுக்கி யுள்ள கொடூரமான சம்பவம். ஒன்றிய அரசு  இருதரப்பையும் அழைத்து பேச்சு வார்த்தை நடந்தியிருந்தால் இத்தகைய சம்பவங்கள் மணிப்பூரில் நடந்திருக்க வாய்ப்பு இருந்திருக்காது. உலக நாடுகளுக்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தி, விருதுகளை வாங்கிக் கொள்ளும் பிரதமர் மோடி சொந்த நாட்டு  மக்கள் கொலை செய்யப்படும் போது மெளனமாக இருந்தார்.மணிப்பூர் விவகா ரத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்க  பிரதமர் அச்சப்படுகிறார். நாட்டு மக்களி டம் பிரதமர் மோடி மன்னிப்புக்கேட்க வேண்டும். மணிப்பூரில் கலவரத்தின் மூல மாக குறிப்பிட்ட சமூக வாக்குகளை பெற லாம் என்பதால் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற அனுமதிக்கிறார்களா என்ற சந்  தேகம் எழுந்துள்ளது. குஜராத் வன்முறை யையும் இவ்வாறு செய்தே வாக்குகளை பெற்றார்கள். மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து ஜூலை 25 ஆம் தேதி நாடு முழுவதும் இந்திய  கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்  டம், போராட்டம், ரயில் மறியல் நடை பெறும். விழுப்புரத்தில் நடைபெறும் போராட்டத்தில் நான் கலந்து கொள்கி றேன். பெட்ரோல், டீசல் விலை உயர்வால்  தான் எல்லா பொருட்களின் விலையும் உய ருகிறது. தமிழக பாஜக விலைவாசியை குறைக்கச்சொல்லி தில்லிக்கு சென்று தான் போராட வேண்டும். தமிழகத்தில் போரா டுவது தேவையற்றது. இவ்வாறு அவர் கூறினார்.

விருதுநகரில் சற்று குறைந்தது தக்காளி, சின்ன வெங்காயம், மிளகாய் விலை

விருதுநகர், ஜூலை 23- விருதுநகர் காய்கறி மார்க்கெட்டில் தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி ஆகியவற்றின் விலையானது சற்று குறைந்துள்ளது.  கடந்த சில வாரங்களாக ஒரு கிலோ  தக்காளியின் விலையானது ரூ.140 வரை விற்கப்பட்டு வந்தது. இதையடுத்து தமிழக  அரசின் சார்பில் ரேசன் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60 க்கு விற்கப்பட்டது. இந்நிலையில் சந்தைக்கு தக்காளியின் வரத்து கடந்த சில தினங்களாக அதிக ரித்து வருகிறது. இதனால், அதன் விலை யிலும் சற்று மாற்றம் காணப்படுகிறது. எனவே, நேற்று விருதுநகர் காய்கறி சந்தை யில் ஒரு கிலோ தக்காளி ரூ.100க்கு விற் பனை செய்யப்பட்டது. இதேபோல் சின்ன வெங்காயம் கடந்த  வாரம் ஒரு கிலோ ரூ.140 முதல் 160 வரை  விற்பனை செய்யப்பட்டது. தற்போது அதில்  சற்று குறைவு ஏற்பட்டு கிலோ ஒன்றுக்கு ரூ.100 முதல் 120 வரை விற்பனையாகிறது. இதேபோல் ஒரு கிலோ இஞ்சியின் விலையானது கடந்த வாரம் வரை ரூ.400 வரை விற்கப்பட்டது. இந்த நிலையில் பழைய இஞ்கி கிலோ ரூ.220க்கும், புதிய  இஞ்சி கிலோ ரூ.120க்கும் விற்கப்படு கிறது. மேலும், கடந்த வாரம் ஒரு கிலோ பச்சை  மிளகாய் ரூ.120 க்கு விற்கப்பட்டது. நேற்று  கிலோ ரூ.80க்கு விற்பனை செய்யப்படு கிறது. இதனால் பொது மக்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.

ஆண்டாள் கோவில் தேரோட்டப் பணி சிறப்பாக ஈடுபட்ட காவலர்களுக்கு எஸ்.பி பாராட்டு

விருதுநகர், ஜூலை 23- விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் ஜூலை 22  அன்று நடைபெற்ற ஆண்டாள் கோவில் ஆடிப்பூரத் தேரோட்ட நிகழ்ச்சியில் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் சிறப்பாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவ லர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாச  பெருமாள் பாராட்டு தெரிவித்தார். திருவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோவில் திருக் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழாவின் நிறைவு நாளான ஜூலை.22 காலை ஆடிப் பூரத் தேரோட்டம் நடை பெற்றது. இதில் மதுரை சரக காவல்துறை துணைத் தலை வர் பொன்னி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாச  பெருமாள், நெல்லை எஸ்.பி. சிலம்பரசன் ஆகியோர் மேற்பார்வையில் 1400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தேரோட்டத்தின் போது எவ்வித அசம்பா விதங்களும் நிகழாதவாறு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப் படுத்தப்பட்டிருந்தன. முன்கூட்டியே பணி அலுவல் குறித்து அனைவருக்கும் அறிவுரை வழங்கப்பட்டு முன்னோட்டம் பார்க்கப்பட்டது. அதில், 18 பழுதடைந்த கட்டிடங்கள் கண்டறியப்பட்டு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 4 ரத வீதி களிலும் 135 கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப் பட்டன. 20 உயரமான கட்டிடங்களில் போலீசார் நிறுத்தப்  பட்டு தொலைநோக்கி, வாக்கி-டாக்கி, கைக் கேமராக்கள் மூலம் கண்காணிப்பு செய்யப்பட்டது. இதனால், 70 ஆயிரம்  பக்தர்கள் பங்கேற்ற தேரோட்ட நிகழ்வில் எவ்வித அசம்பா விதங்களும் நடைபெறவில்லை. அனைவரும் பாது காப்பாகவும், மிகவும் அமைதியாகவும் சாமி தரிசனம் செய்து விட்டுச் சென்றனர். எனவே, பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட அனைத்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாச பெரு மாள் பாராட்டுக்களை தெரிவித்தார்.

போலி ஆவணங்கள் மூலம் நில மோசடி

திருப்புவனம் சார்பதிவாளர் கைது

சிவகங்கை, ஜுலை 23- மதுரை தெற்குவெளி வீதி சப்பானி கோவில் பகுதியில் வசிப்பவர் விக்னேஷ் (53 ). இவரது சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அடுத்த மாரநாடு.  இங்கு இவர்களுக்கு பூர்வீக பாத்தி யப்பட்ட 2.7 ஏக்கர் நஞ்சை நிலங்கள் உள்ளன.  இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திண்டுக்கல் மாவட்டம்  அம்மைநாயக்கனூரை சேர்ந்த ஒருவர், விக்னேஷ் என்ற பெயரில் அந்த இடத்தை  திருப்புவனம் சார்பதிவாளர் அலுவல கத்தில் மாரநாட்டைச் சேர்ந்த குமார் என்பவ ருக்கு கிரைய பத்திரம் செய்து கொடுத்துள்  ளார். இதைத் தொடர்ந்து குமார் அந்த  இடத்தை தன்னுடைய தம்பி மற்றும் வேறு சிலருக்கும் கிரயம் செய்து கொடுத்த தாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த மோசடி குறித்து அறிந்த விக்னேஷ், சிவ கங்கை மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை யினரிடம் புகார் அளித்தார். இந்த புகார்  தொடர்பாக கடந்த 2021 ஆம் ஆண்டு  ஆகஸ்ட் மாதம் குற்றப்பிரிவு போலீசார்  விசாரணை நடத்தி குமார், இளையராஜா, மீனாள், சதீஷ்குமார், நந்தினி, சந்திர சேகர், சித்ரசேனன், உள்பட சிலர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக மாவட்ட  குற்றப்பிரிவு துணை காவல் கண்கா ணிப்பாளர் பிரகாஷ் மற்றும் காவல் ஆய்வா ளர் சுந்தரமகாலிங்கம் ஆகியோர் தொடர் விசாரணை நடத்தினர். விசாரணையில் கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பரில் திருப்பு வனத்தில் உள்ள பத்திர பதிவு அலுவல கத்தில் பொறுப்பிலிருந்த சார் பதிவாளர் ராமச்சந்திரன் என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதைத் தொட ர்ந்து அவரை குற்றப்பிரிவு காவல்துறை யினர் கைது செய்தனர். தற்போது கைது  செய்யப்பட்ட சார்பதிவாளர் ராமச்சந்திரன் ஏற்கனவே மற்றொரு சம்பவத்தில் துறைரீதி யாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, தற்காலிக  பணி நீக்கத்தில் உள்ளார் என்பது குறிப்பி டத்தக்கது. இதுகுறித்து குற்றப்பிரிவு மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ்  தெரிவிக்கையில், சிவகங்கை மாவட்டத்  தில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில்  பணிபுரியும் சார் பதிவாளர்கள் அனை வரும் பொதுமக்கள் பாதிக்கப்படாத வகை யில் முறையான ஆவணங்கள் உள்ளதா என சரி பார்த்து பத்திரங்களை பதிவு  செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.