districts

மலேசியாவிற்கு கடத்த முயன்ற ரூ.9கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல்

தூத்துக்குடி , ஏப். 29 தூத்துக்குடியில் இருந்து மலேசியா விற்கு கடத்த முயன்ற ரூ.9 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம்  வழியாக அவ்வப்போது போதைப்பொருட் ்கள், செம்மரக்கட்டைகள் உள்ளிட்டவை கடத்தப்பட்டு வருகின்றன. இதனால் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வரு கின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி துறை முகம் வழியாக மலேசியா போர்ட் கிலாங் துறைமுகத்துக்கு செம்மரக்கட்டைகள் கடத்தப்படுவதாக பெங்களூரு மத்திய வரு வாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், பெங்களூரில் இருந்து தூத்துக்குடி வந்த அதிகாரிகள் சிப்காட் வளாகத்தில் உள்ள சரக்கு பெட்டக குடோ னில் சோதனை நடத்தினர். அந்த குடோனில் மலேசியாவுக்கு அனுப்புவதற்காக 9 பெரிய மரப்பெட்டிகளில் இரும்பு குழாய்கள் வைத்து மூடப்பட்டு இருந்தது. இந்த பெட்டிகளை ஒவ்வொன்றாக திறந்து பார்த்தனர். பெட்டியின் மேல் பகுதியில் இரும்பு குழாய்கள் வைக்கப்பட்டு இருந்தது. அடிப்பகுதியில்  செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது.   அங்கிருந்த சுமார் 9 டன் செம்மரக் கட்டைகளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு ரூ.9 கோடி என்று  கூறப்படுகிறது. தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில், திருப்பூரில் இருந்து அந்த மரப்பெட்டிகள் கொண்டு வரப் பட்டதாக ஆவணங்களில் கூறப்பட்டு இருந்தது. அதன்பேரில் செம்மரக்கட்டை களை கடத்த முயன்றவர்களை பிடிப்ப தற்காக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடா்பாக லாரி ஓட்டுநா் உள்ளிட்ட இருவரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.