districts

உதவி பெறும் பள்ளிகளுக்கும் 7.5சதவீத இடஒதுக்கீடு சென்னை உயர்நீதிமன்றம் யோசனை

மதுரை, செப். 19 - மருத்துவப் படிப்பு சேர்க்கையில், 7.5 சதவிகித உள் இடஒதுக்கீட்டை, அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் வழங்குவது தொடர்பாக பதி லளிக்குமாறு, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. இராமநாதபுரத்தைச் சேர்ந்த பூபேஷ் என்பவர் சென்னை உயர் நீதி மன்ற மதுரைக் கிளையில் பொது நல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந் தார்.

அதில், இராமநாதபுரம் மாவட்ட  நகர்ப் பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இல்லை என்ப தால் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தனியார் பள்ளிகளில் படிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர்; எனவே, இராமநாதபுரம் மாவட்ட நகர்ப் பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அமைக்க நடவடிக்கை எடுப்பதற்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கு வியாழனன்று விசாரணைக்கு வந்தபோது, அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கே மருத்துவப் படிப்பில் 7.5 சதவிகித உள் இடஒதுக்கீடு வழங்கப்படுவதாக மனுதாரர் தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள், “அரசுப் பள்ளிகளில் பயிலும் மாண வர்களுக்கே மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கப்படு கிறது.  இந்த சூழலில் தமிழகத்தில் உள்ள அனைத்து தாலுகாக்கள் அல்லது மாவட்ட தலைநகரங்களிலாவது அரசுப் பள்ளிகளை அமைக்க வேண்டும்” என தெரிவித்தனர்.

இல்லையெனில் மருத்துவ படிப்புக்கான 7.5 சதவிகித உள் இடஒதுக்கீட்டை அரசு உதவி பெறும்  பள்ளிகளுக்கும் ஏன் வழங்கக் கூடாது? என கேள்வி எழுப்பிய நீதிபதி கள், இது குறித்து முடிவெடுப்பதற்கு இதுவே சரியான நேரம் என்று குறிப்பிட்டதோடு, இந்த வழக்கில் தமிழக பள்ளிக் கல்வித்துறை செய லாளர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கின்  விசாரணையை அக்டோபர் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.