districts

img

சிவகாசி : மூலப் பொருட்களின் விலை உயர்வால் டைரிகளின் விலை 40 சதவீதம் உயர்வு

சிவகாசி, நவ.29- சிவகாசியில் 2023 ஆம் ஆண்டிற்கான டைரிகள் தயாரிக்கும் பணிகள் தீவிரம டைந்துள்ளன. அதேவேளையில் மூலப் பொருட்களின் கடுமையான விலை ஏற்றத் தால் டைரிகளின் விலையானது கடந்த ஆண்டை விட  40 சதவிகிதம் வரை உயர்ந்  துள்ளது. குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் சிவகாசியில் பட்டாசு, தீப்பெட்டி தொழி லுக்கு அடுத்தபடியாக அச்சுத்தொழில் திகழ்கின்றது. பட்டாசு விற்பனையானது  முடிந்துள்ள நிலையில் காலண்டர், டைரி தயாரிப்பில் சிவகாசி நகரம் மற்றும் அதைச்  சுற்றியுள்ள பகுதிகளில் வேகமாக இப்பணி கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக,  2023 ஆம் ஆண்டிற்கான டைரி கள் அச்சிடும் பணிகள் நூற்றுக்கணக்கான அச்சகங்களில் இரவு பகலாக  தீவிரமாக நடைபெற்று  வருகிறது.  இங்கு தயாராகும் டைரிகள் தமிழகம் மட்டுமின்றி, புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய வெளி மாநிலங்களுக்கும்  வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.   இந்த ஆண்டு ரூ.90 முதல் ரூ.600 வரை விலையுள்ள டைரிகள் தயாரிக்கப்பட்டு வரு கின்றன. டைரி தயாரிக்கப் பயன்படும் முக்கி யப் பொருட்களான காகிதம், அட்டை ஆகிய வற்றின் விலை உயர்வு காரணமாக டைரி களின் விலை இந்த ஆண்டு 40 சதவிகிதம்  அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படு கிறது. பல்வேறு வடிவங்களில் டைரிகள் தயா ரிக்கப்படுவதுடன்,  மேட் பைண்டிங், சேட்டின்  பைண்டிங், லெதர் பைண்டிங், வெல்வெட் பைண்டிங் ஆகிய அதி நவீன மாடல்களிலும் டைரிகள் தயாரிக்கப்படுகின்றன. இதுதவிர, ஆங்கிலத் தேதி கொண்ட டைரிகள், தமிழ் மற்றும் ஆங்கில டைரிகள், தமிழ் டைரிகள் மற்றும் நல்ல நேரம், திதி, நட்சத்திரம், சந்திராஷ்டமம், உலக வரைபடங்கள்  போன்றவை அச்சிடப்பட்ட டைரிகளும் தயார் செய்யயப்படுகிறது. 

மேலும் சில டைரிகளில் தினசரி காலண்  டர் சிலிப்பில் உள்ளது போன்று நல்ல நேரம், சுபதினங்கள், அரசு விடுமுறை நாட்கள், தலைவர்களின் பிறந்த நாட்களும் குறிப்பி டப்பட்டுள்ளது. சில டைரிகளில் தினம் ஒரு  மருத்துவ குறிப்புகள், தினம் ஒரு பொன் மொழிகள் என விதவிதமான முறையில் டைரிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இது குறித்து சிவகாசி டைரி தயாரிப்பா ளர்கள் கூறுகையில், தற்போது விதவித மான ஆப்கள் கொண்ட கைப்பேசிகள்,  சமூக  வலைதளங்களின் தாக்கம் ஆகியவை அதிக அளவில் உள்ளன. ஆனால், இவைகளை யெல்லாம் முறியடித்து டைரி எழுதும் பழக் கத்தை தக்க வைப்பது, தூண்ட வைப்பது அச்சுத்தொழிலுக்கு பெரும் சவாலாகவே  உள்ளது.  இதனால் பொதுமக்களை கவரும் வகையில் சிவகாசியில் புதுவிதமான டைரி  தயாரிப்பில் ஆர்வம் காட்டி வருகின்றோம்.   மேலும், தரமான காகிதத்தில், உறுதி யான அட்டைகளால் பைண்டிங் செய்யப் பட்டு, பல வண்ணங்களில் டைரிகள் அச்சி டப்படுகிறது. இதனால், சிவகாசியில் தயா ராகும் டைரிகளுக்கு எப்போதும் நல்ல வர வேற்பு உள்ளது. டைரிக்கு முக்கிய மூலப்பொருளாக உள்ள மேப்லித்தோ காகிதம் கடந்த ஆண்டு டன் ஒன்றின் விலை ரூ.65ஆயிரமாக இருந்  தது. நிகழாண்டு, அதே காகிதத்தின் விலை யோ ரூ.1லட்சத்து 3 ஆயிரமாக  உயர்ந்து விட்டது. மேலும்,  கடந்த ஆண்டு ரூ.36ஆயிரத் திற்கு விற்பனை செய்யப்பட்ட பாலிபோர்டு எனப்படும்  முதல்தர அட்டையானது,  இந்த  ஆண்டு ரூ.48ஆயிரம் வரை உயர்ந்து விட்டது. இதனால், கூடுதல் விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். ஆகவே, கடுமையான   விலை உயர்வு கார ணமாக கடந்த ஆண்டைவிட டைரி விலை 40 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளது என தெரிவித்தார்.