திருவள்ளூர், ஜூலை 18- திருவள்ளூர் மாவட்டத்தில் தீக்கதிர் நாளிதழுக்கு 335 சந்தா வழங்கும் நிகழ்ச்சி திங்களன்று (ஜூலை 17) நடைபெற்றது. மாவட்டத்தில் ஜூலை 1 முதல் 10 ஆம் தேதி வரை தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம் தீவிரமாக நடைபெற்றது. இதில் சேகரிக்கப் பட்ட சந்தாக்களை வழங்கும் நிகழ்ச்சி திங்க ளன்று (ஜூலை 17) திருவள்ளூரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இதில் 335 தீக்கதிர் சந்தாவிற்கான தொகை ரூ.5 லட்சத்து 5 ஆயிரத்து 650 - கட்சியின் மாநில செயற்குழு உறுப்பின ரும், தீக்கதிர் ஆசிரியருமான மதுக்கூர் ராம லிங்கத்திடம் வழங்கப்பட்டது.(இதில் 162 ஆண்டு சந்தா ரூ.3,24,000 மற்றும் 173 6 மாத சந்தா ரூ.1,81,650 வசூலிக்கப்பட்டது) நிகழ்ச்சிக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினரும், தீக்கதிர் பொறுப்பாளருமான ஆர்.தமிழ்அரசு தலைமை தாங்கினார். இதில் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.நம்புராஜன், மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால் , தீக்கதிர் சென்னைப் பதிப்பு முன்னாள் பொது மேலாளர் சி.கல்யாண சுந்தரம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.பன்னீர்செல்வம், பி.துளசி நாராயணன், ஜி.சம்பத், கே.ராஜேந்திரன், ஏ.ஜி.சந்தானம், சி.பெரு மாள், ஏ.ஜி.கண்ணன், முன்னாள் மாவட்டச் செயலாளர் கே.செல்வராஜ், மாவட்டக் குழு உறுப்பினர் என்.கீதா, இடைக்கமிட்டி செயலாளர்கள் எஸ்.இ.சேகர் (பொன்னேரி), இ.ராஜேந்திரன் (கும்மிடிப்பூண்டி), ஜி.வி.எல்லையன்(சோழவரம்), அந்தோணி (திருத்தணி), சிவப்பிரகாசம் (ஆர்.கே.பேட்டை), தீக்கதிர் செய்தியாளர் பெ. ரூபன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.