திருச்சுழி, மே.29- விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே பிள்ளையார் குளத்தில் கடந்த சில தினங்க ளுக்கு முன்பு சூறைக்காற்று டன் திடீர் மழை பெய்ததில் 2 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழைகள் அனைத்தும் தரை யில் சரிந்து நாசமாகின. திருச்சுழி வட்டம், நரிக்குடி ஒன்றியத்திற்கு உட்பட்டது பிள்ளையார்குளம். இப்பகுதி யைச் சேர்ந்தவர் முத்துக் குமார். விவசாயியான இவர், தனக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் வாழைகளை பயி ரிட்டிருந்தார். பாத்தி கட்ட, வாழைக் கன்றுகள் நட, உரம் இட, மருந்து தெளிக்க என இதற்காக ரூ.10 லட்சம் வரை செலவு செய்திருந்தார். இதைய டுத்து, வாழைகள் நன்கு வளர்ந்து மகசூல் தரும் நேரத்தில் கடந்த மே 28 அன்று திடீரென சூறைக்காற்றுடம் கோடை மழை பெய்தது. இதில் முத்துக்குமார் பயிரிட்டி ருந்த அனைத்து வாழை மரங்க ளும் மண்ணில் சரிந்து விழுந்தன. இதனால், விவசாயி முத்துக்குமாரின் குடும்பத்தினர் தாங்க முடியாத வேதனையில் தவித்து வருகின்றனர். தகவலறிந்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் வி.முரு கன், ஒன்றிய தலைவர் பாலு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் பி.அன்புச்செல் வன், வட்ட செயலாளர் மார்கண் டேயன் ஆகியோர் விவசாயி முத்துக்குமாருக்கு நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். நிவாரணம் வழங்க கோரிக்கை பிள்ளையார் குளத்தில் திடீர் சூறைக்காற்றுடன் கூடிய கோடை மழையால் விவசாயி முத்துக்குமாருக்கு ரூ.10லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசும், மாவட்ட நிர்வா கமும், இயற்கை பேரிடர் நிவா ரண நிதியிலிருந்து பாதிக் கப்பட்ட முத்துக்குமாருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.