districts

சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும்

விருதுநகர், அக்.31- பொது மக்களுக்கு உப்புச்  சுவையுள்ள குடிநீரை வழங்காமல் சுத்தமான குடிநீர் வழங்க வேண்டு மென விருதுநகர் நகராட்சியில் நடைபெற்றக் கூட்டத்தில் பெரும்  பாலான உறுப்பினர்கள் வலி யுறுத்தினர். விருதுநகர் நகராட்சிக் கூட்டம் தலைவர் ஆர்.மாதவன் தலைமை யில் நடைபெற்றது. ஆணையாளர் ஸ்டான்லிபாபு, பொறியாளர் மணி  ஆகியோர் முன்னிலை வகித்த னர். கூட்டத்தில், நிதி நிலை மோச மாக உள்ளதால், நகராட்சிப் பகுதி யில் கொசுக்களை கட்டுப்படுத்த புதிதாக புகை மருந்து அடிக்கும் இயந்திரம் ரூ.5 லட்சத்திற்கு வாங்க வேண்டியதில்லை. ஏற்கனவே, கொரோனா காலத்தில் வாங்கிய  இயந்திரங்களை பயன்படுத்துங் கள் என நகர்மன்ற உறுப்பினர்கள் ஆறுமுகம், ஜெயக்குமார் ஆகி யோர் ஆலோசனை வழங்கினர்.

அதற்குப் பதிலளித்த தலைவர் அப்படியே செய்யலாம் என்றார். கச்சேரி சாலையில் உள்ள பழைய வாசக சாலையை இடித்து விட்டு எந்த நிதியில் வணிக வளா கங்கள் கட்டப்பட உள்ளது? என  உறுப்பினர் செல்வரத்னா கேள்வி எழுப்பினார். நமக்கு நாமே திட்டத்  தில் தனியார் மூலம் கட்டப்பட உள்  ளதாக தலைவர் பதில் அளித்தார். ஏற்கனவே, வாசக சாலை இருந் தது. எனவே, அதே இடத்தில் மீண்  டும் வாசக சாலை கட்ட வேண்டும் என உறுப்பினர் ஜெயக்குமார் வலி யுறுத்தினார். தொடர்ந்து பேசிய உறுப்பினர் ஆறுமுகம், தனியார் மூலம் கட்ட டம் கட்டக் கூடாது. அரசிடமிருந்து நிதி வந்தவுடன் கட்டடப் பணியை தொடங்கலாம். அதுவரை அக்கட் டடத்தை இடிக்கக் கூடாது என் றார். இதையடுத்து, அந்தத் தீர்மா னம் ரத்து செய்யப்பட்டது. சுமார் ரூ.4 கோடியில் கடன்  பெற்று நகர் முழுவதும் உள்ள  விளக்குகளை எல்.இ.டி விளக்கு களாக மாற்ற வேண்டிய அவசிய மில்லை.

ஏற்கனவே நூற்றாண்டு விழா நிதியில் எல்.இ.டி விளக்கு களாக மாற்றியதில் தரமற்ற விளக் குகள் அமைத்ததால் தற்போது லஞ்ச ஒழிப்புத்துறையில் வழக்கு நிலுவையில் உள்ளது. இருக்கும் விளக்குகளை பராமரித்தாலே போதும் என உறுப்பினர் ஜெயக் குமார், பேபி, ஆறுமுகம் உள் ளிட்டோர் வாதிட்டனர். இந்தப் பிரச்சனைக்கு பதில ளித்த தலைவர், கடனாகப் பெறா மல், அரசின் மானியமாக வந்தால்  எல்.இ.டி விளக்குகளாக மாற்றிக் கொள்ளலாம் என்றார். நகரின் மேற்குப் பகுதி முழு வதும் குடிப்பதற்கு லாயக்கற்ற தண்ணீர் நகராட்சியால் வழங்கப் படுகிறது. கிழக்குப் பகுதியில் மட்  டும் தாமிரபரணி தண்ணீர் வழங்  கப்படுகிறது. அனைத்துப் பகுதி களுக்கும் தாமிரபரணி தண்ணீர் வேண்டுமென உறுப்பினர் முத்து ராமன் உள்ளிட் பெரும்பாலான உறுப்பினர்கள் கூட்டத்தில் குரல் கொடுத்தனர்.

அதற்கு பதிலளித்த தலைவர், தாமிரபரணி குடிநீர் அனைத்துப் பகுதிகளுக்கும் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றார். தங்கள் பகுதியில் குடிநீருடன் கழிவு நீர் கலந்து வருவதாக உறுப்  பினர் முத்துலட்சுமி புகார் தெரி வித்தார். நீண்ட நாளாக இருந்த பாதாளச் சாக்கடை அடைப்பு நீக்  கப்பட்டதால், நல்ல குடிநீர் கிடைக்  கும் என ஆணையாளர் பதிலளித்தார். கிருஷ்ணமாச்சாரி சாலை, சிவன் கோவில் தெரு, பிள்ளை யார் கோவில் தெரு, மேற்கு ரத வீதி, ரயில்வே பீடர் சாலை ஆகிய பகுதிகளில் பழுதடைந்த எல்இடி விளக்குகள் சரி செய்யப்பட வில்லையென உறுப்பினர் வெங்க டேஷ் புகார் தெரிவித்தார். அதற்கு பதிலளித்த தலைவர், கடந்த ஒப்பந்தப்புள்ளியில் அந்த விளக்குகளை சீர் செய்வது குறித்து ஏதும் இல்லை. தற்போது வழங்கப்  பட்ட ஒப்பந்தபுள்ளியில் எல்.இ.டி விளக்குகள் சேர்க்கப்பட்டுள்ளது. விரைவில் சீரமைக்கப்படும் என்றார்.