பெரம்பலூர், ஜூன் 18 - சுமார் 6.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு அழிந்து போன அம்மோ னைட்ஸ் என்ற கடல்வாழ் உயிரினத் தின் தொல்லுயிர் எச்சங்கள் காட்சிப் படுத்தப்பட்டுள்ள பெரம்பலூர் அம்மோ னைட்ஸ் அருங்காட்சியக மையத்தினை சனிக்கிழமை பெரம்பலூர் வட்டாட்சி யர் அலுவலக வளாகத்தில் போக்கு வரத்து துறை அமைச்சர் சா.சி.சிவ சங்கர் திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீ.வெங்கடபிரியா தலைமை வகித்தார். பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன், மாவட்ட கண்காணிப்பா ளர் மணி, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் சி.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் அமைச்சர் சிவசங்கர் செய்தி யாளர்களிடம் தெரிவிக்கையில், “தொல்லுயிர் எச்சங்களை பாதுகாத்திட வேண்டும் என்ற நோக்கத்தில், தமிழ் நாடு முதலமைச்சர் பெரம்பலூர் மாவட்டத் தில் தொல்லுயிர் பூங்கா அமைக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கியுள்ளார். அதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரு கின்றன. விரைவில் தொல்லுயிர் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பெரம்பலூர் மாவட்டத்தில் காரை, கொளக்காநத்தம், கரம்பியம் மற்றும் பிலிமிசை உள்ளிட்ட பகுதிகள் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடலால் சூழப்பட்டு இருந்த போது, கடலுக்கடி யில் வாழ்ந்து வந்த கடல்வாழ் உயிரி னங்கள், தாவரங்கள், மரங்கள் ஆகி யவை காலப்போக்கில் புதையுண்டு படி மங்களாக மாறின.
புவியியல் ரீதியான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட போது, இப்படிமங்களின் முக்கியத்துவம் குறித்து உலகிற்கு தெரிய வந்தது. ஆலத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட சாத்தனூரில் கோனிபர்ஸ் வகையை சார்ந்த (பூக்கள் தோன்றாத) அடிமரம் ஒன்று கல்மரமாக காட்சியளித்து வரு கிறது. புகழ்பெற்ற புவியியலாளர் டாக்டர் எம்.எஸ்.கிருஷ்ணனால், 1940 ஆம் ஆண்டு இந்த கல்மரம் கண்டறியப் பட்டது. அது மட்டுமல்லாது அம்மோ னைட் எனப்படும் தலைக்காலி கடல்வாழ் உயிரினமானது சுமார் 41 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய தாகவும், சுமார் 6.5 கோடி ஆண்டு களுக்கு முன்பு ஏற்பட்ட ஐந்தாவது பேரழிவின்போது டைனோசர்களோடு சேர்ந்த இந்த வகை உயிரினங்களும் முற்றிலுமாக அழிந்துவிட்டதாகவும் ஆய்வியல் அறிஞர்கள், வல்லுநர்கள் ஆதாரப்பூர்வமாக தெரிவிக்கின்றனர். இந்த பூமியில் சுமார் 10,000-க்கும் மேற்பட்ட அம்மோனைட் தொல்லுயிர் எச்சங்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக் கின்றனர். அதில் 150-க்கும் மேற்பட்ட தொல்லுயிர் எச்சங்கள் நமது பெரம்ப லூர் மற்றும் அரியலூர் மாவட்டங்க ளின் பல்வேறு பகுதிகளில் இருந்து கிடைக்கப் பெற்றவை என்பது குறிப்பிடத் தக்கது. தற்போது திறந்து வைக்கப் பட்டுள்ள இந்த பெரம்பலூர் அம்மோ னைட் மையத்தில் வெளிநாடுகளில் இருந்து கிடைத்துள்ள சில அரியவகை அம்மோனைட்களின் எச்சங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அம்மோனைட் தொல்லுயிர் எச்சங்கள் குறித்த வரலாற்றை பொது மக்களும், மாணவ-மாணவிகளும், ஆய்வு அறிஞர்களும் தெரிந்து கொள்ள வும், அவற்றை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையி லும் பெரம்பலூர் மாவட்டத்தில் பொது மக்கள் அதிகம் வந்து செல்லும் பிரதான பகுதியான வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் இந்த மையம் அமைக்கப் பட்டுள்ளது. எனவே பொதுமக்களும், ஆராய்ச்சி யாளர்களும், ஆய்வறிஞர்களும் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.