districts

தனியார் பள்ளி வாகனங்களில் ஆய்வு

பெரம்பலூர், ஜூலை 3 - பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 57 தனியார் பள்ளிகளின் வாகனங்களில் மாவட்ட வருவாய் அலுவ லர் நா.அங்கையற்கண்ணி ஆய்வு செய்தார்.  பள்ளி வாகனங்களின் ஓட்டுநர்கள் முழு உடல் தகுதி யுடன் கூடிய உரிமம் பெற்றிருக்க வேண்டும், ஓட்டுநர் களுக்கு தனி கிரில் அமைத்து, பள்ளி குழந்தைகள் அவர் அருகில் செல்ல முடியாத அளவில் இருக்க  வேண்டும். ஓட்டுநர்கள் கட்டாயம் சீருடை அணிந்திருக்க  வேண்டும். பயணத்தின்போது கட்டாயம் உதவியாளர் இருக்க வேண்டும். பள்ளி வாகனத்தின் படிக்கட்டுகள் அரசு நிர்ணயித்த அளவில் இருக்க வேண்டும். முதலு தவி பெட்டி, தீயணைப்பான் கருவி கட்டாயம் இருக்க வேண்டும். அவசர கால கதவு நல்ல நிலையில் இயங்கும்படி அமைக்கப்பட்டிருக்க வேண்டும். வாகனத்தில் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தி யிருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விதிமுறை களை பின்பற்றி வாகனங்கள் இயக்குவது குறித்து ஆய்வு செய்வதற்கு மாவட்ட அளவிலான குழு  அமைக்கப்பட்டு ஆய்வு செய்யும் பணிகளை மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார்.  முதற்கட்டமாக சனிக்கிழமை 175 பள்ளி வாகனங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், 150 வாகனங்களுக்கு தகுதிச் சான்றிதழ்களும், 20 பேருந்துகளில் சில குறை பாடுகளை கண்டறிந்து 7 நாட்களுக்குள் அதனை சரி செய்து மீண்டும் ஆய்வுக்கு கொண்டு வர அறிவுறுத்தப் பட்டுள்ளது.