பெரம்பலூர், ஜன.29- பெரம்பலூர் பழைய பேருந்து நிலை யம் அருகேயுள்ள காந்தி சிலை முன்பு குஜராத் கலவரம் தொடர்பாக பிபிசி ஆவ ணப்பட பிரச்சார அறிவிப்பு ஜனவரி 28 அன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் விடுக்கப்பட்டது. இந்நிலையில், வாலிபர் சங்க மாவட் டச் செயலாளர் கே.எம்.சக்திவேல், மாவட் டப் பொருளாளர் அறிவழகன், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் ராமகிருஷ் ணன், மாவட்டத் தலைவர் கருணைகடல், மாவட்ட துணைச்செயலாளர் வேல்முரு கன் உள்பட 8 பேரை காவல்துறையினர் அவர்களின் வீடுகளுக்கு சென்று கைது செய்துள்ளனர். இதை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வன்மையாக கண்டிப்பதோடு, கைது செய்யப்பட்ட வாலிபர், மாணவர் சங்க நிர் வாகிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வாலிபர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.