districts

img

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்

புதுச்சேரியில் பொங்கல் பண்டிகையையொட்டி  அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ. 490  மதிப்பிலான 10 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா கதிர்காமம் தில்லையாடி வள்ளியம்மை அரசு உயர்நிலைப் பள்ளியில்  நடைபெற்றது. பயனாளிகளுக்கு இலவச பொருட்கள் அடங்கிய தொகுப்பை  முதல்வர் ரங்கசாமி   வழங்கி திட்டத்தை துவக்கி வைத்தார். விழாவில்  அமைச்சர் சாய் ஜே.சரவணன்குமார், அரசு கொறடா ஆறுமுகம்,தொகுதி சட்டமன்ற உறுப்பினர்  ரமேஷ்  அரசுச் செயலர்கள் உதயகுமார், மலர்க்கண்ணன், குடிமைப்பொருள் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை இயக்குனர் சக்திவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.