புதுச்சேரி, ஜூலை 15- மக்களின் உணவு உரிமையை வலி யுறுத்தி புதுச்சேரியில் சிபிஎம் சார்பில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.
ரேசன் கடைகளை திறந்து அத்தியா வசிய பண்டங்களை வழங்கி, மக்களின் உணவு உரிமையை உத்தரவாதப்படுத்த வேண்டும், குடியிருப்பு பகுதியில் உள்ள ரெஸ்டோபார்களை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி திறந்தவெளி சிறப்பு மாநாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதுச்சேரியில் ஜூலை 18 ஆம் தேதி நடைபெறுகிறது. மாநாட்டின் கோரிக்கைகளை விளக்கி புதுச்சேரி முழுவதும் திறந்த வாகன பிரச்சாரம் நடை பெற்று வருகிறது.
உழவர்கரை
உழவர்கரை நகராட்சிக்கு உட்பட்ட லாஸ்பேட்டை உழவர் சந்தையில் துவங்கிய பிரச்சாரத்திற்கு கமிட்டி செய லாளர் ராம்ஜி தலைமை தாங்கினார். சிபிஎம் மாநில செயலாளர் ராஜாங்கம் பிரச்சாரத்தை துவக்கி வைத்து பேசினார். செயற்குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரன், கொளஞ்சியப்பன், சத்யா, மாநிலக்குழு உறுப்பினர் சஞ்சய் சேகரன் கமிட்டி உறுப்பினர்கள் அரிகிருஷ்ணன், குப்புசாமி, சுரேஷ் உட்பட பலர் பிரச்சாரத்தில் பங்கேற்றனர்.
புதுச்சேரி நகரம்
புதுச்சேரி காந்தி வீதியில் 2வது நாளாக நடைபெற்ற பிரச்சாரத்திற்கு, புதுச்சேரி நகர கமிட்டி செயலாளர் மதி வாணன் தலைமை தாங்கினார். கட்சியின் மூத்த தலைவர் முருகன் பங்கேற்று பேசினார். செயற்குழு உறுப்பினர்கள் சீனிவாசன்,கலியமூர்த்தி, மாநில குழு உறுப்பினர் சரவணன், கமிட்டி உறுப்பி னர்கள் ஜோதிபாசு உட்பட பலர் பங்கேற்றனர். இதேபோல் வில்லியனூர், மண்ணாடிபட்டு, பாகூர் ஆகிய இடைக்கமிட்டிகளுக்கு உட்பட்ட பகுதிக ளில் பிரச்சாரம் நடைபெற உள்ளது.