புதுச்சேரி,அக்.14- லாபத்தில் இயங்கும் புதுச்சேரி மின்துறையை தனியாரிடம் தாரைவார்க்கும் முடிவை என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசு கைவிடக்கோரி அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் சுதேசி பஞ்சாலை எதிரில் தர்ணா நடை பெற்றது. மின்துறை தனியார்மய எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் பிரேமதாசன் தலைமை தாங்கினார். சிஐடியு பிரதேச தலைவர் பிரபுராஜ், செயலாளர் சீனுவாசன், ஏஐடியூசி மாநிலத் தலைவர் அபிஷேகம், செயலாளர் சேதுசெல்வம், ஐஎன்டியுசி மாநில தலைவர் ஞானசேகரன், ஏஐசிசிடியு மாநில நிர்வாகி மோதிலால், எல்எல்எப் சங்க தலைவர் செந்தில், எம்எல்எப் சங்க தலைவர் வேதநாயகம், அரசு ஊழியர் சம்மேளன தலை வர் ரவிச்சந்திரன், பொதுச்செயலாளர் ராதா கிருஷ்ணன், பொருளாளர் கிருஸ்தோபர் ஆகியோர் பேசினர்.