புதுக்கோட்டை, பிப்.20 - நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் சனிக் கிழமை நடைபெற்றதையடுத்து, டெல்டா மாவட்டங்களில் அதிகபட்சமாக கரூரில் 76. 34 சதவீதமும், குறைந்தபட்சமாக கும்பகோ ணத்தில் 65 சதவீத வாக்குகளும் பதிவாகின. புதுக்கோட்டை மாவட்டத்தில் நடை பெற்ற இரு நகராட்சிகள் மற்றும் 8 பேரூ ராட்சிகளில் மொத்தம் 1,67,358 வாக்குகள் பதி வாயின. இது 69.61 விழுக்காடு ஆகும். புதுக்கோட்டை மாவட்டத்தில் இரு நகராட்சிகள் மற்றும் 8 பேரூராட்சி களில் உள்ள 189 வார்டுகளில், இரு வார்டு களுக்கு உறுப்பினர்கள் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டனர். 187 வார்டு உறுப்பினர் களுக்கு 902 வேட்பாளர்கள் களம் கண்டனர். மொத்தம் 278 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஓரிரு இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட பழுது உடனுக்குடன் சரி செய்யப்பட் டது. நகராட்சிகளைப் பொருத்தவரை அறந்தாங்கியில் - 69.92, புதுக்கோட்டையில் - 65.06, பேரூராட்சிகளில் ஆலங்குடி - 79.58, அன்னவாசல் - 79.59, அரிமளம் - 74.17, இலுப் பூர் - 83.39, கறம்பக்குடி - 74.98, கீரமங்கலம் - 80.96, கீரனூர் - 75.34, பொன்னமராவதி - 68. 84 என்ற விழுக்காட்டில் வாக்குகள் பதிவா கின. மாவட்டத்தில் சராசரியாக 69.61 சதவீத வாக்குப் பதிவாகியுள்ளது.
மாவட்ட ஆட்சியர் ஆய்வு
புதுக்கோட்டை நகராட்சி மற்றும் 8 பேரூ ராட்சிகளில் வாக்குகள் புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரி வளாகத்திலும், அறந்தாங்கி நகராட்சியின் வாக்குகள் அறந்தாங்கி பாலி டெக்னிக் கல்லூரியிலும் செவ்வாய்க்கிழமை எண்ணப்படுகின்றன. இந்நிலையில், புதுக்கோட்டையில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தை ஆட்சியர் கவிதா ராமு ஞாயிற்றுக் கிழமை நேரில் ஆய்வு செய்தார். அப்போது அவர் தெரிவிக்கையில், வாக்கு எண்ணிக்கையின்போது ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் முடிவை அறிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை நகராட்சி யில் பதிவான வாக்குகள் அனைத்தும் 10 மேஜைகள் மூலம் 5 சுற்றுகளாகவும், ஒவ்வொரு பேரூராட்சியும் ஒரு மேஜையின் மூலம், கறம்பக்குடி 16 சுற்றுகளாகவும், இலுப்பூர் மற்றும் கீரமங்கலம் 14 சுற்றுகளாகவும், மற்றவை 15 சுற்றுகளாகவும் எண்ணப்பட உள்ளது. மேலும் அறந்தாங்கி நகராட்சி 5 மேஜைகள் மூலம் 8 சுற்றுகளாக எண்ணப்படவுள்ளது என்றார்.
மயிலாடுதுறை - 65.77 சதவீதம்
தமிழகத்தின் 38 ஆவது மாவட்டமாக உருவாக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தில் 2 நகராட்சிகள், 4 பேரூராட்சிகள் உள்ளன. மொத்தம் 596 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மாவட்டம் முழுவதும் தேர்தல் வாக்கு பதிவுக் காக 177 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப் பட்டுள்ளன. மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தலில் 95,602 பேர் வாக்களித்த நிலை யில் வாக்குப்பதிவு சதவீதம் 65.77 ஆக உள்ளது. அந்த அந்த வாக்குசாவடி மையங்க ளில் பதிவு செய்யப்பட்ட வாக்கு பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. மயிலாடுதுறை நகராட்சியில் பதிவான வாக்குகள் தருமபுரம் ஞானாம்பிகை அரசினர் மகளிர் கலைக்கல்லூரியிலும், சீர்காழி நகராட் சியில் பதிவான வாக்குகள் சீர்காழி சபாநாய கம் முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளியி லும், குத்தாலம், தரங்கம்பாடி, வைத்தீஸ்வரன் கோயில், மணல்மேடு பேரூராட்சிகளில் பதிவான வாக்குப் பெட்டிகள் மயிலாடுதுறை டிபிடிஆர் தேசிய மேல்நிலைப் பள்ளிக்கு கொண்டு சென்று பாதுகாப்பாக பூட்டி சீல் வைக்கப்பட்டன. வாக்குப் பெட்டிகள் வைக்கப் பட்டுள்ள இடங்களில் பலத்த போலீஸ் பாது காப்பு போடப்பட்டுள்ளது.
திருவாரூர் - 68.25 சதவீதம்
திருவாரூர் மாவட்டத்தில் 68.25 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. திருவாரூர் நக ராட்சியில் 65.52 சதவீதமும், மன்னார்குடி நக ராட்சியில் 64.16 சதவீதமும், திருத்துறைப் பூண்டி நகராட்சியில் 81.22 சதவீதமும், கூத்தா நல்லூர் நகராட்சியில் 63.03 சதவீத வாக்கு களும் பதிவாகியுள்ளன. இதன் சராசரி அளவு 66.25 சதவீதம். பேரூராட்சிகளில் பேரளம் (80.88), நன்னி லம் (77), குடவாசல் (72.87), கொரடாச்சேரி (76. 25), வலங்கைமான் (76.84), நீடாமங்கலம் (76.81), முத்துப்பேட்டை (63.21) சதவீதம் வாக்கு பதிவாகியுள்ளது. இதன் சராசரி அளவு 76.69 சதவீதம்.
கரூர் - 76.34 சதவீதம்
கரூர் மாநகராட்சியில் 75.84 சதவீத வாக்குகளும், குளித்தலை, பள்ளப்பட்டி, புகளூர் ஆகிய மூன்று நகராட்சிகளில் 68.15 சதவீத வாக்குகளும், அரவக்குறிச்சி, கிருஷ் ணராயபுரம், மருதூர், புஞ்சை தோட்டக் குறிச்சி, உப்பிடமங்கலம், நங்கவரம், பழைய ஜெயங்கொண்டம், புலியூர் ஆகிய 8 பேரூ ராட்சிகளில் 86.43 சதவீத வாக்குகளும் பதி வாகியுள்ளன. கரூர் மாவட்டத்தில் மொத்தம் 76.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
பெரம்பலூர் - 55 சதவீதம்
பெரம்பலூர் நகராட்சியில் 21 வார்டு உறுப்பினர்கள் மற்றும் குரும்பலூர், அரும்பா வூர், பூலாம்பாடி, லப்பைக்குடிக்காடு ஆகிய பேரூராட்சிகளில் தலா 15 வார்டு உறுப்பினர் கள் வீதம் 60 உறுப்பினர்கள் என மொத்தம் 81 வார்டு உறுப்பினர்களை தேர்ந்தெடுப் ப்பதற்கான தேர்தல் பிப்.19 அன்று நடைபெற் றது. மதியம் 3 மணியளவில் 55 சதவீதம் ஓட்டுக்கள் பதிவானது.
அரியலூர் - 75.69 சதவீதம்
அரியலூர் மாவட்டத்தில் சராசரியாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 75.69 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் நக ராட்சியில் மொத்தம் 18 வார்டுகள், ஜெயங்கொ ண்டம் நகராட்சியில் 21 வார்டுகள், உடை யார்பாளையம் பேரூராட்சியில் 15 வார்டுகள், வரதராஜன்பேட்டை பேரூராட்சியில் 15 வார்டுகள் என 69 பதவிகளுக்கு அரியலூர் நகராட்சியில் 90 பேரும், ஜெயங்கொண்டம் நக ராட்சியில் 108 பேரும், வரதராஜன்பேட்டை பேரூராட்சியில் 70 பேரும், உடையார்பாளை யம் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டு களுக்கு 55 பேர் போட்டியிட்டனர். இதில் 13 ஆவது வார்டு வேட்பாளர் மட்டும் போட்டி யின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப் பட்டது. அரியலூர் நகராட்சியில் 71.18 சதவீத மும், ஜெயங்கொண்டம் நகராட்சியில் 76.44 சதவீதமும், உடையார்பாளையம் பேரூராட்சி யில் 82.35 சதவீதமும், வரதராஜன்பேட்டை பேரூராட்சியில் 79.33 சதவீதமும் வாக்குப் பதிவாகியுள்ளது.
தள்ளாத வயதிலும் ஜனநாயக கடமை
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள வரதராஜன்பேட்டை பேரூராட்சியின் 4 ஆவது வார்டு பகுதியை சேர்ந்தவர் அம லோற்பவம். 95 வயதான இந்த மூதாட்டி தள்ளாத வயதிலும் பேரூராட்சி தேர்தலில் வாக்களிக்க வேண்டுமென்று முனைப்புடன் இருந்துள்ளார். மதியம் ஒரு மணியளவில் சக்கர நாற்காலியில் வாக்குச்சாவடிக்கு வந்து தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.
தஞ்சாவூர் - 66 சதவீதம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர், கும்பகோணம் மாநகராட்சிக்கும், பட்டுக் கோட்டை, அதிராம்பட்டினம் நகராட்சிக்கும் மற்றும் 20 பேரூராட்சிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 456 பதவி யிடங்களுக்கு 2,032 பேர் போட்டியிட்டனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் 750 வாக்குப்பதிவு மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் மாலை 6 மணி நிலவரப்படி 66 சதவீத வாக்குகள் பதிவாயின. இதில் தஞ்சாவூர் மாநகராட்சியில் 61 சதவீதமும், கும்பகோணம் மாநகராட்சியில் 65 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன. பட்டுக்கோட்டை நகராட்சியில் 66 சதவீத மும், அதிராம்பட்டினம் நகராட்சியில் 63 சதவீத மும், மொத்தமுள்ள 20 பேரூராட்சிகளில் 72 சத வீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன. மாவட்டத் தில் சராசரியாக 66 சதவீத வாக்குகள் பதிவாகி யுள்ளன.
பேரூராட்சி
ஆடுதுறை, திருபுவனம், மெலட்டூர், பேராவூரணி, மேலத்திருப்பூந்துருத்தி, ஒரத்த நாடு, பெருமகளூர், சுவாமிமலை, வல்லம், மதுக்கூர், வேப்பத்தூர், பாபநாசம், சோழபுரம், திருநாகேஸ்வரம், அய்யம்பேட்டை, அம்மா பேட்டை, திருக்காட்டுப்பள்ளி, திருவையாறு, திருவிடைமருதூர், திருப்பனந்தாள் என மாவட்டம் முழுவதும் உள்ள 20 பேரூராட்சி களில் பதிவான ஒட்டுமொத்த வாக்கு 72 சத வீதம் ஆகும்.
போட்டியின்றி தேர்வு
மாவட்டத்தில் 20 பேரூராட்சிகளில் மொத்தமுள்ள 300 வார்டுகளில், பெரு மகளூர் பேரூராட்சியில் 5, 10 ஆவது வார்டு களில் போட்டியின்றி வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டதாலும், அய்யம்பேட்டை பேரூ ராட்சியில் 9 ஆவது வார்டில் வேட்பாளர் அனுசுயா திடீரென இறந்ததால், அங்கு தேர்தல் நடைபெறவில்லை. இதைத்தொ டர்ந்து மீதமுள்ள 297 வார்டுகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற்றது.
கும்பகோணம் - 65 சதவீதம்
கும்பகோணம் மாநகராட்சியில் 65 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கும்பகோணம் கருப்பூர் ரோட்டில் உள்ள அரசு கலைக்கல்லூ ரிக்கும் ஆடுதுறை, திருபுவனம், திருவிடை மருதூர், திருநாகேஸ்வரம், திருப்பனந்தாள், வேப்பத்தூர், சோழபுரம், சுவாமிமலை, பாபநாசம் ஆகிய பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் கும்பகோணம் மயிலாடு துறை சாலை நால்ரோடு அருகில் உள்ள லிட்டில் பிளவர் மேல்நிலைப்பள்ளியில் அமைக் கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கும் கொண்டு செல்லப்பட்டன. வாக்கு எண்ணும் மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணிநேரமும் கண்காணிக் கப்பட்டு வருகிறது.