districts

img

போராட்டமே மாற்றத்தை கொண்டு வரும் என்பதை மக்களவைத் தேர்தல் உணர்த்தியிருக்கிறது

புதுக்கோட்டை, ஜூலை 16 - தொடர்ச்சியான போராட்டமே மாற்றத்தைக் கொண்டு வரும் என்பதை  நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் உணர்த்தி இருக்கிறது என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை காந்திநகர் கிளை சார்பில் ரஷ்ய புரட்சியாளர் லெனின் நூற்றாண்டு கொடியேற்று மற்றும் கல்வெட்டு திறப்புவிழா ஞாயிறன்று நடைபெற்றது. கிளைச் செயலாளர் செ.பிச்சைமுத்து தலைமை வகித்தார். கட்சிக்கொடியை மத்தியக் குழு உறுப்பினர் மரியம் தாவ்லே ஏற்றி வைத்து உரையாற்றினார். 

கல்வெட்டை திறந்து வைத்து மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி பேசியதாவது:

மாமேதைகள் மார்க்சும் ஏங்க ல்ஸ்சும் உருவாக்கிக் கொடுத்த தத்துவம், அதை தனது உத்திகளால்  நடைமுறைப்படுத்திய லெனினின் நூற்றாண்டு விழாவை நாம் கொண்டா டிக் கொண்டு இருக்கிறோம். 

பாஜக ஆட்சியை, தேசிய ஜனநா யக கூட்டணி ஆட்சியாக மக்கள் மாற்றிக்  காட்டி இருக்கிறார்கள். அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மூன்றில் இரண்டு பங்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேவை. இதற்கு 70  எம்.பி.க்கள் அவர்களுக்கு கூடுதலாக தேவைப்படுகிறது. என்ன விலை கொடுத்தாலும் அவர்களால் இவ்வளவு  எம்.பி.க்களை வாங்க முடியாது.

ராமரை வைத்து ஓட்டு கேட்ட பாஜக வினர், ராமர் கோவில் உள்ள பைசாபாத்  தொகுதியிலேயே மண்ணைக் கவ்வி  உள்ளனர். மதத்தைவிட எங்களுக்கு வேலை, விலைவாசி, பொருளாதாரம் தான் முக்கியம் என மக்கள் தேர்தலில்  உணர்த்தி இருக்கிறார்கள். பஞ்சாப்,  ராஜஸ்தான், ஹரியானா, உத்தரப்பிர தேசம் என பெருமளவில் விவசாயிகள்  போராட்டம் நடந்த இடங்களில் எல்லாம் பாஜக தோல்வியடைந்துள்ளது. தொடர்ச்சியான போராட்டங்களே மாற்றத்தை கொண்டு வரும் என்பதை இத்தேர்தல் நமக்கு உணர்த்தி இருக் கிறது.

என்றாலும் அவர்கள் மக்கள் விரோதக் கொள்கைகளை அமல்படுத் துவதில் பின்வாங்கமாட்டார்கள். இதை  எதிர்த்து உறுதிமிக்க போராட்டத்தை நடத்த வேண்டும்.

தனிமனித துதிபாடாமல் இயக் கத்தை முன்நிறுத்துகிற கட்சி மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. வாக்கு சதவீதம்  குறைந்திருக்கலாம். ஆனால், ஏழை- எளிய மக்கள் தங்களுக்கு பாதிப்பு வரும்போது மார்க்சிஸ்ட் கட்சி அலுவல கத்தைத்தான் தேடி வருகின்றனர். இன்றைக்கும் அடித்தட்டு மக்களிடம் செல்வாக்குப் படைத்த கட்சியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளது.  சரியான புரிதலோடும், உத்திகளோ டும் செயல்பாட்டால் இந்தியாவிலும் நம்மால் மாற்றத்தை கொண்டுவர முடியும். 

இவ்வாறு உ.வாசுகி பேசினார்.

கட்சியின் மாவட்டச் செயலளார் எஸ்.கவிவர்மன், செயற்குழு உறுப்பி னர்கள், நகரச் செயலாளர் ஆர்.சோலையப்பன், மாவட்டக்குழு உறுப் பினர்கள் பங்கேற்றனர். முன்னதாக நகரக் குழு உறுப்பினர் பி.நிதிஷ்குமார் வரவேற்க, நகரக் குழு உறுப்பினர் பழ. குமரேசன் நன்றி கூறினார்.