புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம் காரையூர் அம்மன் கோவில் தெருவின் காவலர் குடியிருப்பு அருகில் கொட்டப்படும் குப்பைகள், இறைச்சி கழிவுகளால் அப்பகுதி முழுவதும் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே, காரையூர் ஊராட்சி நிர்வாகம் குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.