புதுக்கோட்டை, ஜூன் 15- புதுக்கோட்டை மாவட் டம் நார்த்தாமலை ஊராட்சி யில் உள்ள துப்பாக்கி சுடும் பயிற்சித் தளத்திலிருந்து வெளியான குண்டு அடி பட்டு இறந்த சிறுவனின் தாயா ருக்கு சத்துணவுத் திட்டத்தில் வேலை வழங்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட் டம் நார்த்தாமலை ஊராட் சிக்கு உட்பட்ட கொத்தமங்க லப்பட்டியைச் சேர்ந்த கலைச்செல்வன்-பழனியம் மாள் தம்பதியரின் மகன் புக ழேந்தி(11). சிறுவன் கடந்த ஆண்டு டிசம்பர் 30 ஆம் தேதி நார்த்தாமலையில் உள்ள தனது பாட்டி வீட்டில் இருந் தார். அப்போது அருகில் பசு மலைப்பட்டியில் உள்ள துப் பாக்கி சுடும் பயிற்சித் தளத்தில் இருந்து வெளியான குண்டு சிறுவன் புகழேந்தியின் தலை யில் பாய்ந்தது. படுகாயமடைந்த சிறு வன் தஞ்சாவூர் அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பல னின்றி கடந்த 3.1.2022 அன்று உயிரிழந்தான்.
எம்.சின்னதுரை எம்எல்ஏ கோரிக்கை
பாதிக்கப்பட்ட சிறுவ னின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். குடும்பத்தில் உள்ள ஒருவ ருக்கு அரசு வேலை வேலை வழங்க வேண்டும். மேற்படி துப்பாக்கி சுடும் பயிற்சித் தளத்தை நிரந்தரமாக மூட வேண்டும் என கந்தர்வ கோட்டை தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை அரசுக்கு கோரிக்கை வைத்தார். மாவட்ட அமைச்சர்களின் கவனத்திற்கும் கொண்டு சென்றார். இதுகுறித்து உயர் நீதிமன்ற மதுரை கிளையி லும் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், மேற்படி துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தை நிரந்தரமாக மூடு வதற்கு நீதிமன்றத்தில் அரசு சார்பில் உறுதி அளிக்கப் பட்டு, பயிற்சித்தளம் மூடப் பட்டது. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசு சார்பி லும், அமைச்சர்கள் சார்பி லும் ரூ.15 லட்சம் வரை நிவா ரணம் வழங்கப்பட்டது. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசு வேலை என்பது கேள் விக்குறியாக இருந்தது. இந்நிலையில், சட்டப் பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரையின் தொடர் முயற்சியை அடுத்து, சிறு வன் புகழேந்தியின் தாயா ருக்கு சத்துணவுத் திட்டத்தில் சமையல் உதவியாளர் வேலை வழங்கப்பட்டது. இதற் கான ஆணையை புதுக்கோட் டைக்கு சமீபத்தில் வருகை தந்த முதல்வர் மு.க.ஸ்டா லின் வழங்கினார். தனக்கு அரசு வேலை வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகை யில் புதன்கிழமை புழழேந்தி யின் தாயார் பழனியம்மாள், தந்தையார் கலைச்செல்வன் ஆகியோர் மாவட்ட ஆட்சி யர் கவிதா ராமுவை, சட்ட மன்ற உறுப்பினர் எம்.சின்ன துரையுடன் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், செயற்குழு உறுப்பினர் சு.மதியழகன், நார்த்தாமலை ஊராட்சிமன் றத் தலைவர் வேலு மற்றும் ஜெயச்சந்திரன் உள்ளிட் டோர் உடனிருந்தனர்.