districts

img

பார்வை மாற்றுத்திறனாளியை கொடூரமாக தாக்கிய விராலிமலை போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுத்திடுக! தமிழக அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல்

அறந்தாங்கி, மார்ச் 18 - புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையை அடுத்த கவர பட்டி, பழவன்பட்டியை சேர்ந்தவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் பார்வையற்ற மாற்றுத்திறனாளி சங்கர். இவர் பெண்கள் பள்ளி அருகே மது விற்ப தாக புகார் அளித்ததை அடுத்து, விராலிமலை போலீசார் காவல் நிலையத்தில் வைத்து கொடுரமாக தாக்கியதில், சங்கர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் வெளி யிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது: பார்வையற்ற மாற்றுத்திறனாளி சங்கர் சட்டவிரோத மது விற்பனையை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், அவசர அழைப்பு 100-க்கு தகவல் கொடுத் தார். இப்பகுதியில் தொடர்ந்து மாமூல் வாங்கி வந்த விராலிமலை காவல்துறையினர், கவரபட்டி, பழவன்பட்டியைச் சேர்ந்த பார்வை மாற்றுத்திறனாளி சங்கரை, காவல் நிலையத்தில் வைத்து, “உனக்கு சிறப்பு கவனிப்பு உண்டு. உன் வேலையை பார்க்க வேண்டியது தானே. நீ என்ன காந்தியா. காந்தி  அடியை இப்ப பார்றா” என்று  கூறி கொடூரமாக தாக்கியிருக்கிறார் கள். இதுதான் காவல்துறையின் வீரமா. இவர்களை பணியிடை நீக்கம் செய்தது போதாது. மாவட்ட  காவல்துறையும் தமிழக அரசும், மாற்றுத்திறனாளி சங்கரை கொடூர மாக தாக்கிய காவலர்கள் மீது  வழக்குப் பதிந்து கடும் நடவடிக்கை  எடுக்க வேண்டும். படுகாயமுற்ற சங்கருக்கு உரிய உயர் மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட சங்கருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். காவல் நிலையங்களில் காவலர்க ளுக்கு மனிதாபிமானம் பற்றி பயிற்சி  எடுக்க வேண்டும். மாவட்டத்தில் தொழில்முறை ரௌடிகள் மீது தயங்கி தயங்கி  நடவடிக்கை எடுப்பது, வழக்குப் பதிவு செய்துவிட்டு பெயிலில் எடுக்கும் வரை தேடல் நாடகம் போடுவது போன்ற காவல்துறை யின் செயலும், பார்வையற்ற வரிடம் வீரத்தை காட்டியுள்ளதும் காவல்துறை மீது வெறுப்பை உண்டாக்குகிறது. மாவட்டம் முழு வதும் தாராளமாக நடைபெறும் சட்ட விரோத மது விற்பனை, கஞ்சா, திருட்டு லாட்டரி, இரண் டாம் நம்பர் சூதாட்டம் இவைகளை  முற்றிலும் ஒழிக்க வேண்டும். துணையாக செயல்படும் காவல் துறையினர் மீது பாரபட்சமற்ற முறையில் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும். மாற்றுத்திறனாளி சங்கரை அடித்து கொடுமைப்படுத்தியதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் புதுக்கோட்டை மாவட்டக் குழு  சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.  இவ்வாறு அவர் கூறியிருக் கிறார்.