districts

ஆதீனங்கள் பாதுகாப்பில் உள்ள கோயில்களில்கூட சிலைகள் திருடப்படுகிறது முன்னாள் ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் பேட்டி

புதுக்கோட்டை, டிச.19- ஆதீனங்கள் பாதுகாப்பில் உள்ள கோயில்களில்கூட சிலைகள் காணாமல் போய் அதற்கு பதிலாக போலி சிலைகள் வைக்கப்படுகின்றன என சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள் ஐஜி பொன்.மாணிக்கவேல் தெரிவித்தார். புதுக்கோட்டையில் செய்தியாளர் களுக்கு அவர் அளித்த பேட்டியில், “வெளி நாடுகளில் இருந்து சிலையை மீட்கும் போது அதற்கு சொந்தமான இடத்திற்கு கொண்டு சேர்க்க வேண்டும். அதற்குரிய வழக்குகளை அதிகாரிகள் பதிவு செய்ய  வேண்டும். 2500 கோயில் சிலைகளை அந்  தந்த கோயில்களுக்கு கொண்டு சேர்ப்பது, 3.50 லட்சம் சாமி சிலைகளை கண்டறிந்து  பதிவு செய்வது, 26 ஆயிரம் கோயில்களில் 10 முதல் 20 ஆண்டுகளுக்குள் அர்ச்சகர் களே இல்லாத நிலை ஏற்படும். அதை எப்படி எதிர்கொள்வது உள்ளிட்டவற்றை எதிர் நோக்கி செயல்பட்டு வருகிறோம். ஆதீ னங்கள் பாதுகாப்பில் உள்ள கோயில் களில்கூட சிலைகள் காணாமல் போய்  அதற்கு பதிலாக போலி சிலைகள் வைக்கப்  படுகின்றன. போலி சிலைகளைக் கண்ட றிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.