districts

img

பள்ளிக் கல்வித்துறையின் கலைத்திருவிழா  

பொன்னமராவதி, நவ.29- புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே  கண்டியாநத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் கலைத்திருவிழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளித் தலைமையாசிரியர் சுபத்ரா தலைமை வகித்தார். மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி, பாட்டுப்போட்டி, ஓவியப்போட்டி, களி மண்ணில் ஓவியம் வரைதல் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் ஒன்றிய அள விலான போட்டிக்கு தேர்வு செய்யப்படுவர்.  விழாவில், ஊராட்சித்தலைவர் செல்வி, பள்ளி  மேலாண்மைக்குழு தலைவி யசோதா, பெற்றோர் ஆசிரி யர் கழகத்தலைவர் சங்கர், ஊராட்சி உறுப்பினர்கள் அழ கப்பன், சரோஜாதேவி, புரவலர் ராசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.