புதுக்கோட்டை, ஏப்.28- புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையை சேர்ந்த எழுத்தாளர் அண்டனூர் சுரா வின் சிறுகதைத் தொகுப்பு சிறந்த படைப்பாக தமிழக வளர்ச்சித்துறையால் தேர்வு செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையை அடுத்த அண்டனூர் கிராமத்தைச்சேர்ந் தவர் சு.இராஜமாணிக்கம். இவர் அண்டனூர் சுரா என்கிற புனைப் பெயரில் சிறுகதை, கட்டுரை, நாவல்களை தொ டர்ந்து எழுதி வருகிறார். பல் வேறு பரிசுகளையும் பாராட்டுக் களையும் பெற்றுள்ளார். இந்நிலையில், 2018 ஆம் ஆண்டு இவர் எழுதிய ‘பிராண நிறக்கனவு’ என்கிற சிறு கதைத் தொகுப்பு அவ்வாண் டுக்கான சிறந்த சிறுகதைத் தொகுப்பாக தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையால் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 29 அன்று, சென்னை உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறு வனத்தில் நடைபெறும் விழா வில் எழுத்தாளர் அண்டனூர் சுராவுக்கு பரிசும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட வுள்ளது.