districts

சாயக்கழிவுநீரை நீரோடையில் விடுவதா?

நாமக்கல், மார்ச் 26- சாய ஆலையிலிருந்து கழிவுநீரை நீரோடையில் விடுவதற்கு கால்வாய் தோண்டப்பட்ட நிலையில், பொது மக்களின் கடும் எதிர்ப்பால் அப்பணி கைவிடப்பட்டது.

காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளதால், குடிநீர்  தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. காவிரி ஆற்றில் நீரேற்று  நிலையம் அமைந்துள்ள பகுதிகளில் அதிகளவு சாயக்க ழிவுநீர் தேங்குவதால், உள்ளாட்சி அமைப்புகளுக்கு சுத்தப்ப டுத்தி குடிநீரை வழங்க முடியாத அளவிற்கு நீர் மாசடைந் துள்ளது. தொடர்ந்து காவிரி ஆற்றில் சாயக்கழிவுநீரை கலந்து குடிநீரை கெடுத்து வரும் சாய ஆலைகள் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து பொதுமக் களும் தன்னார்வ அமைப்புகளும் வலியுறுத்தி வரு கின்றனர். இந்நிலையில், நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளை யம் அக்ரஹாரம் ஊராட்சியில் இயங்கி வரும் சாயப்பட் டறை நிர்வாகம், சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை ஆவத்தி பாளையம் என்ற பகுதி அருகே நீரோடையில் வெளி யேற்ற, சாய ஆலையிலிருந்து பொக்லைன் மூலமாக மிகப் பெரிய அளவில் கால்வாய் பள்ளம் தோண்டி அதில் குழாய் களை பதிக்கும் பணியை கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கியது. இதற்கு ஆவத்திபாளையம், களியனூர் பகுதி யில் உள்ள பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்த போதும் கால்வாய் தோண்டும் பணியை சாய ஆலை நிர்வா கம் தொடர்ந்து மேற்கொண்டு வந்த நிலையில், அப்பகுதி யைச் சேர்ந்த பொதுமக்கள், பொக்லைன் வாகனத்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து கால் வாய் தோண்டும் பணியை கைவிடுவதாக சாய ஆலை நிர்வாகம் தெரிவித்தது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், சுத்திக ரிக்கப்படாத கழிவுநீரை காவிரி ஆற்றில் கலப்பதற்கு தொடர்ந்து எதிர்ப்புகள் உள்ள போதே, இவர்கள் துணி கரமாக பட்ட பகலில் கால்வாய் மூலமாக சாயக்கழிவுநீரை வெளியேற்றுவதற்கு பணிகளை துவக்கி உள்ளனர் என நினைக்கும் பொழுது அதிர்ச்சியாக உள்ளது. இதுகுறித்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் முறையான விசா ரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது  பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது, என்றனர்.