districts

img

மோடியின் அரசியல் தியானத்துக்கு ஒரு நாள் செலவு ரூ. 10 கோடி!

நாகர்கோவில், மே 31 - பிரதமர் நரேந்திர மோடியின் 3 நாள்  கன்னியாகுமரி பயணம் மற்றும் தியா னத்திற்காக அரசின் கருவூலங்களில் இருந்து 10 கோடி ரூபாய்க்கு மேல்  செலவிடப்படுவதாக தகவல் வெளி யாகி உள்ளது.

பிரதமரின் பாதுகாப்பை உறுதி செய்வது தமிழ்நாடு - கேரள அரசு களின் பொறுப்பாக இருந்தாலும், நிதிச் சுமையையும் தங்கள் தலையில் சுமக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

கன்னியாகுமரிக்கு மோடி வருகை யையொட்டி இரு தினங்களுக்கு முன்பே சுற்றுலாப் பயணிகளுக்கு கடு மையான கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டன. வியாழனன்று (மே 30) காலை முதலே படகுப் போக்குவரத்து நிறுத்தப் பட்டது. மாலையில் ஹோட்டல்கள் மூடப்பட்டன. பாதுகாப்புக்காக கன்னி யாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், திருச்சிராப்பள்ளி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாநிலம் முழு வதிலிருந்தும் 3 ஆயிரத்து 500-க்கும்  மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப் பட்டனர். சர்வதேச சுற்றுலா நகரம் முற்றிலும் காவல்துறை மற்றும்  மத்திய ராணுவத்தால் கையகப்படுத்தப்  பட்டு உள்ளது. பிரதமரின் ஹெலி காப்டர் தரையிறங்கி விவேகானந்தர் பாறைக்கு செல்லும் வரை உள்ள சுமார் இருநூறு விடுதிகளில் தங்கி இருந்த வர்களை காவல்துறையினர் வெளி யேற்றினர். மோடி திரும்பிய பிறகு தான் இவை திறக்கப்படும். மற்ற விடுதி களும் என்எஸ்ஜி உள்ளிட்ட படை களின் கட்டுப்பாட்டில் உள்ளன. கடற்படை மற்றும் கடலோர காவல்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

விவேகானந்தர் பாறையில் இருந்து 5 கிலோமீட்டர் சுற்றளவில் மீன்பிடிக்க தமிழக அரசு தடை விதித்துள்ளது. கடற் படை- விமானம்- கடலோர காவல் படை கள், கடலோர காவல்துறை போன்ற வை இரவு பகலாக வரலாற்றில் இது வரை இல்லாத வகையில் காவலில் ஈடு பட்டுள்ளன. விவேகானந்தர் பாறைக்கு வெகு தொலையில் இரண்டு கடற்படை கப்பல்கள், பத்து அதிநவீன ரோந்து படகுகள் பாதுகாப்பு பணியில் ஈடு படுத்தப்பட்டுள்ளன.

துறவி கோலத்தில் மோடி

கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் வியாழனன்று இரவில் ஓய்வெடுத்த மோடி இரண்டாம் நாளாக மே 31 வெள்ளியன்று காலை காவி உடையில் துறவிக்கோலம் பூண்டு தியானத்தில் ஈடுபட்டதாக புகைப்படங்களும், காணொலி காட்சி களும் வெளியிடப்பட்டன. சூரிய உத யத்தை பார்ப்பது போன்ற படங்களும் வெளியாகின.