districts

தீக்குளிக்க முயன்ற வாலிபர்

நாகர்கோவில், மார்ச் 11- நாகர்கோவில் கீழஆசாரிபள்ளம் வடக்குத் தெருவைச்  சேர்ந்தவர் ஆன்றனி ஜோசப்சிங் (33). இவருடைய தம்பி  தனது நண்பர்களுடன் வந்து ஆன்றனி ஜோசப் சிங்கி டமும், அவருடைய தாயாரிடமும் அடிக்கடி பிரச்சனை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஆன்றனி ஜோசப்சிங் ஆசாரிபள்ளம்காவல்  நிலை யத்தில் வாய் மொழியாக புகார் கொடுத்ததாகத் தெரி கிறது. எழுத்துப் பூர்வமாக புகார் கொடுக்காததால் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப் படுகிறது. இதனால் ஆன்றனிஜோசப் சிங் சனிக்கிழமை  பிற்பகல்  தான் கொண்டு வந்திருந்த மண்எண்ணெய்யை  தனதுஉடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றதாகத் தெரி கிறது. பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் அவரைக் காப்பாற்றினர்.