நாகர்கோவில், ஜூலை 28 - கன்னியாகுமரி மாவட்டத்தில் தீக்க திர் நாளிதழுக்கு 924 சந்தாக்கள் வழங் கப்பட்டுள்ளன.
நாகர்கோவில் பார்வதிபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக்குழு அலுவலகத்தில் ஞாயி றன்று (ஜூலை 28) தீக்கதிர் சந்தா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என்.ரெஜீஸ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தீக்க திர் முதன்மை பொதுமேலளர் என். பாண்டியிடம் 211 ஆண்டு சந்தா, 71 ஆறு மாதச் சந்தா, 630 மாதச்சந்தாக் களுக்கான தொகை 6 லட்சத்து 27 ஆயிரத்து 500 ரூபாயை, மாவட்டச் செயலாளர் ஆர்.செல்லசுவாமி வழங் கினார்.
தீக்கதிர் ஆசிரியர் எஸ்.பி. ராஜேந் திரன், மாவட்டச் செயற்குழு உறுப்பி னர்கள் ஏ.வி. பெல்லார்மின், எம். அண் ணாதுரை, எம். அகமது உசேன், உஷா பாசி, என்.எஸ். கண்ணன், வி. அனந்த சேகர், மூத்த தோழர்கள் என். முரு கேசன், கே. மாதவன் மற்றும் வட்டாரச் செயலாளர்கள், தீக்கதிர் முகவர்கள், செய்தியாளர்கள் உட்பட ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.