நாகப்பட்டினம், ஜூன் 2- நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்றத் திற்குட்பட்ட வண்டலூர், பரப்பனூர் கிராமத்திலிருந்து 40-க்கும் மேற்பட்ட குடும்பத் தினர் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியில் இணைந்த னர். நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் வட்டம் வண்ட லூர் மற்றும் பரப்பனூர் கிரா மத்திலிருந்து நாற்பதுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மார்க்சிஸ்ட் கட்சி கிளை செய லாளர் டி.பக்கிரிசாமி தலை மையில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரும், சிபிஎம் ஒன்றியக் குழு உறுப்பினரு மான இ.மாரிமுத்து முன்னி லையில் இணைந்தனர். செங்கொடியை ஏற்றி வைத்து கட்சியில் இணைந்த வர்களை வரவேற்று சிபிஎம் மாநிலக் குழு உறுப்பி னரும் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினருமான வி.பி.நாகைமாலி பேசினார். சால்வை அணிவித்து வர வேற்று வாழ்த்தி நாகை மாவட்டச் செயலாளர் வி. மாரிமுத்து பேசினார். எம். மகேஸ்வரன் நன்றி கூறி னார். வண்டலூர் ஊராட்சியில் கிழக்குத் தெரு,தோப்புத் தெரு, மேலத்தெரு, பெரு மாள் கோவில் தெரு, ஆகிய நான்கு இடங்களில் செங்கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் கீழ்வே ளூர் வடக்கு ஒன்றியச் செய லாளர் என்.எம்.அபுபக்கர். தெற்கு ஒன்றியச் செயலாளர் ஆர்.முத்தையன், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.சுபா தேவி, மாவட்டக் குழு மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.