districts

img

நாகை, திருவாரூர் மாவட்டங்களில் கனமழை நெல், பயறு, உளுந்து கடுமையான பாதிப்பு

நாகப்பட்டினம், பிப்.3- நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இத னால், அறுவடைக்கு தயாரான நெல் வயல்களில் மழைநீர் தேங்கி யும், நெற் கதிர்கள் மழை நீரில் சாய்ந்தும் உள்ளன. சுமார் 40 ஆயிரம் ஏக்கர் அளவிற்கு விவ சாய நிலங்கள் பாதிப்படைந் துள்ளன.  நெல் அறுவடை முடிந்த வயல்க ளில் உளுந்து, பயிறு தெளிக்கப் பட்டு நாற்று வெளிவந்த நிலை யில், மழைநீர் தேங்கியதால் முற்றி லும் அழிந்துவிட்டது. மேலும் தஞ்சா வூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்க ளில் பெய்யும் மழை நீரானது நாகை வந்து கடலுக்குள் கலக்கிறது. இத னால் கூடுதலான மழை வெள்ளத் தினை நாகை மாவட்டம் எதிர் கொள்ள வேண்டியுள்ளது. மேலும் கடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்வ தால் நாகை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இத னால், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ளது. வேதார ணியம் பகுதியில் உள்ள உப்பளத் தொழில்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
மழையளவு
நாகப்பட்டினம் மாவட்டத்தில் பிப்ரவரி 3-ஆம் தேதி காலை நில வரப்படி மொத்தமாக 464 மிமீ  மழை பெய்துள்ளது. சராசரியாக 66 மீமி என்ற அளவில் மழை பதி வாகியுள்ளது. அதிகபட்சமாக நாகப்பட்டினம் 87மிமீ வேளாங் கண்ணி 89 மில்லி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.
நஷ்ட ஈடு வழங்க சிபிஎம் கோரிக்கை
நாகப்பட்டினம் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதி களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வி.சுப்பிர மணியன், தலைஞாயிறு ஒன்றி யச் செயலாளர் ஏ.ராஜா ஆகியோர் நேரடியாக சென்று ஆய்வு நடத்தினர்.  இந்நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று பார்வையிட்ட சிபிஎம் மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து கூறு கையில், ‘‘மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்க ருக்கு ரூ.25 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க கோரியும், நெற்பயிர்க ளை அறுவடை செய்ய வெளி மாநிலங்களில் இருந்து அறுவடை இயந்திரங்களை போர்க்கால அடிப்படையில் வரவழைத்து மீதம் இருக்கும் நெற்கதிர்களை அறு வடை செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறினார்.
திருத்துறைப்பூண்டி
திருவாரூர் மாவட்டம் திருத்து றைப்பூண்டி பகுதியில் சம்பா மற்றும் தாளடி அறுவடை பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக திருத்துறைப்பூண்டி பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது.  இதனால் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் சேதமான தால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.  இதுகுறித்து விவசாயி கள் கூறுகையில், ‘‘திருத்துறைப் பூண்டி பகுதியில் 33 சதவீத அளவில் அறுவடை பணிகள் முடிவ டையாத நிலையில், 2 நாட்களாக மழை பெய்து வருவதால் வயல்க ளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால், நீர் வடிந்த பிறகே அறுவடை பணியை தொடங்க முடியும். எனவே, மழைக்கு பிறகு அறுவடை செய்யப்படும் நெல் மணிகளை ஈரப்பதத்தை கணக் கிடாமல் கொள்முதல் செய்ய வேண்டும்’’ என்றனர்.