நாகப்பட்டினம், டிச.8- நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரி யத்தின் கீழ் அடுக்குமாடி குடியிருப்புகளை பயனாளிகளுக்கு வழங்கும் விழா நாகப் பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. நாகப்பட்டினம் நகராட்சி நாகூர் சம்பா தோட்ட பகுதியில் 25 பயனாளிகளுக்கு வீடு களை ஒதுக்கி ஆணை வழங்கப்பட்டது. நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் மரு.அருண் தம்புராஜ், விழாவில் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி, மீன் வளர்ச்சி கழகத் தலைவர் என்.கௌதமன், ஆதிதிரா விடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை தலைவர் உ.மதிவாணன், நாகை நகர் மன்ற துணைத் தலைவர் செந்தில்குமார் உள் ளிட்டோர் கலந்துகொண்டு வீடுகளுக்கான ஆணைகளை வழங்கினர்.