நாகப்பட்டினம், ஆக.25- நாகப்பட்டினம் மாவட் டம் ஒருங்கிணைந்த குழந் தைகள் நல ஊட்டச்சத்து மையத்தின் சார்பில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு போடும் விழா நடைபெற்றது. இதில் கீழ் வேளூர் சட்டமன்ற உறுப்பி னர் வி.பி.நாகைமாலி கலந்து கொண்டு கர்ப்பிணி தாய் மார்களுக்கு சீர்வரிசை தாம்பூலம் வழங்கினார். நாகப்பட்டினம் மாவட்டம் ஒருங்கிணைந்த குழந்தைகள் நல ஊட்டச் சத்து மையத்தின் சார்பில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு. “சமுதாய வளைகாப்பு விழா” நாகப்பட்டினம் தனியார் பொறியியல் கல்லூரி வளா கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நூற்றுக்க ணக்கான கர்ப்பிணிப் பெண் கள் கலந்து கொண்டனர். ஐந்து வகையான சாதங் கள் மதிய உணவாக வழங் கப்பட்டது. சீர் வரிசையாக தாம்பூலத்தட்டு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட் டது. கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி, மாவட்ட ஆட்சியர் மருத்துவர்.அருண் தம்பு ராஜ், மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட் டோர் கலந்துகொண்டனர்.