தேனி பிப்.10- புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் .அகவிலைப் படி உயர்வு சரண்டர் விடுப்பு ஆகிய வற்றை உடனடியாக வழங்க வேண்டும். தமிழக அரசின் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலம் அமல்படுத்த வேண்டும். மாநக ராட்சி, நகராட்சிகளில் நிரந்தர பணியி டங்களை அழித்திடும் அரசாணை எண் 152 ஐ ரத்து செய்ய வேண்டும். காலமுறை ,தொகுப்பூதியம் பெறும் சத்துணவு ,அங்கன்வாடி ,ஊர்புற நூலகர்,செவிலியர் ,கிராம உதவியா ளர் ஆகியோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 10 வெள்ளியன்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேனி நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் தேனி மாவட்ட தலைவர் பெ.பேயத்தேவன் தலைமை வகித்தார் மாநில துணைப் பொது செயலாளர் இரா.மங்கள பாண்டியன் துவக்கி வைத்து பேசினார் .மாவட்டச் செய லாளர் தாஜுதீன் கோரிக்கைகளை விளக்கி பேசினார் .பல்வேறு சங்க நிர்வாகிகள் ராஜேந்திரன் , பவானி , ரவிக்குமார் ,சிவக்குமார் உள்ளிட் டோர் பேசினர். மாவட்ட இணைச் செய லாளர் முத்தையா நன்றி கூறினார் .
மதுரை
மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகில் ராஜா முத்தையா மன்றத்திலி ருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பேரணி நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ஜெ. மூர்த்தி தலைமை வகித்தார். தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க மாநிலத் தலைவர் எம்.பி. முருகையன் துவக்கி வைத்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலா ளர் க. நீதிராஜா விளக்கிப் பேசினார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தோழமைச் சங்க நிர்வாகிகள் மற்றும் ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் சு. கிருஷ்ணன் ஆகியோர் பேசினர். சங்கத்தின் மாவட்ட பொருளாளர் க. சந்திரபோஸ் மற்றும் பலர் பங்கேற்றனர்.
திண்டுக்கல்
திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பிருந்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பாக வாழ்வா தார பேரணி துவங்கியது. பேரணிக்கு மாவட்டத்தலைவர் எஸ்.முபாரக்அலி தலைமை வகித்தார். மாவட்டச்செய லாளர் எம்.பி.விவேகானந்தன் கோரிக்கை விளக்கவுரையாற்றினார். ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச்செயலாளர் எம்.ஜேம்ஸ் அந்தோணிதாஸ் பேரணியை துவக்கி வைத்து பேசினார். பல்வேறு சங்க நிர்வாகிகள் ஜான்பாஸ்டின் டல்லஸ், ஏ.ஜெசி, ராஜமாணிக்கம், செல்வதனபாக்கியம், கே.முருகா னந்தம், கே.பிச்சைவேல் ஆகியோர் வாழ்த்திப்பேசினர். மாநில துணைத் தலைவர் ஞானத்தம்பி சிறப்புரை யாற்றினார். மாவட்டப்பொருளாளர் குப்புசாமி மற்றும் பலர் பங்கேற்றனர்.