districts

img

சிறுபான்மை மக்களின் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்தக் கோரி பாளையத்தில் ஆர்ப்பாட்டம்

தேனி, ஜூன் 18- சிறுபான்மை மக்களின் மீதான தாக்குதலை தடுத்து  நிறுத்த வலியுறுத்தி உத்தம பாளையத்தில் சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாஜக ஆட்சியில் சிறு பான்மை முஸ்லிம் மக்கள்  குடியிருக்கும் வீடுகள் புல்  டோசர் மூலம் இடிப்பது,  தாக்குதல் நடத்துவது போன்ற அராஜகத்தை கண்டித்தும், மதச்சார்பின்மையைக் காக்க வும், சிறுபான்மை மக்களின் உரிமைகளை நிலைநிறுத்த வலியுறுத்தியும் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. உத்தமபாளையம் புற வழிச் சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிறு பான்மை மக்கள் நலக்குழு மாவட்டத் தலைவர் ஜி.எம்.நாகராஜன் தலைமை வகித்  தார். தீக்கதிர் ஆசிரியரும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில பொறுப்பு தலைவருமான மதுக்கூர் ராம லிங்கம் கண்டன உரையாற்றி னார். மாவட்ட செயலாளர் எஸ்.எம்.இப்ராஹிம், மாவட்ட பொருளாளர் எஸ்.எம்.எஸ். சவுக்கத்அலி, மாவட்ட துணைத் தலைவர்கள் எஸ்.சஞ்சீவிகுமார், ஜெ.கதிஜா பேகம், மாவட்ட துணைச் செயலாளர்கள் கே.அக்பர், ஏ.மன்னர் மன்னன், டி.ராஜா, வழக்கறிஞர் சாகுல் ஹமீது, டி.கே.சீனிவாசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.