districts

நியாய விலைக்கடைக்கு அனுப்பும் முன்னர் தரமான, எடையின் அளவை உறுதி செய்க!

 தேனி, பிப்.1-  நுகர்பொருள் வாணிபக்கழக கிட்டங்கி யிலிருந்து நியாய விலை கடைக்கு அனுப் பும் முன்னரே அரிசி உள்ளிட்ட குடிமை பொருட்களின் தரம், எடையின் அளவை  உறுதி செய்ய வேண்டும் என சம்பந்தப் பட்ட அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளீதரன் அறிவுறுத்தியுள்ளார்.  தேனி மாவட்டத்தில் பல இடங்களில் நியாய விலைக் கடைகளில் விநியோகம் செய்யப்படும் அரசி தரமற்றவையாக இருப் பதாக புகார் எழுந்தது. அதனைத் தொடர்ந்து ஆண்டிபட்டியில் தமிழ்நாடு நுகர்பொருள்  வாணிபக்கழக் கிட்டங்கியில் நியாய  விலைக்கடைகளுக்கு அனுப்பப்பட்டு வரும், அரிசியின் இருப்பு, குடிமைப் பொருட் களின் இருப்பு, தரம், எடை அளவு, பணி யாளர்களின் எண்ணிக்கை உள்ளிட்டவை குறித்து மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளீ தரன், பார்வையிட்டு ஆய்வு மேற்கொண் டார். பின்னர் அவர் தெரிவிக்கையில், தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கீழ் தேனி, ஆண்டி பட்டி, பெரியகுளம், போடிநாயக்கனூர் மற் றும் உத்தமபாளையம் ஆகிய வட்டங்களில் செயல்பட்டு வரும் 5 கிட்டங்கிகள் மூலம் 517 நியாய விலைக்கடைகளின் கீழ் 4,24,234 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.  குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங் கப்படும் அரிசி மற்றும் குடிமைப் பொருட்கள் முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை உரிய காலத்திற்குள் அனுப்பிடவும், நியாய விலைக் கடைகளுக்கு அரிசி மற்றும் குடி மைப்பொருட்களின் தரம் மற்றும் எடையின் அளவை உறுதி செய்த பின்னரே அனுப்பிட வும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.