தென்காசி, ஜன.27- இ.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் வியாழனன்றுநடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தேசியக் கொடியினை ஏற்றி காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார் . மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் சமாதான புறாக்களை வானில் பறக்க விட்டார்கள். அதனைத் தொடர்ந்து பல்வேறு துறைகளை சார்ந்தவர்களுக்கு பதக்கங்களையும் சான்றிதழ்களையும் மற்றும் நல திட்ட உதவிகளையும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எ.த.சாம்சன், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிநாடார் , மாவட்ட வருவாய் அலுவலர் கு.பத்மாவதி, மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் சு.தமிழ்ச்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.