districts

மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்களை வெளியேற்ற உயர்நீதிமன்றக் கிளை தடை

தென்காசி, ஜூன் 19- திருநெல்வேலி மாவட்டம், மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு அமையும் வரை அவர்களை அங்கி ருந்து வெளியேற்றக் கடாது என்று  சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் மணி முத்தாறு அடுத்து உள்ள மாஞ் சோலை தேயிலைத் தோட்ட தொழி லாளர்கள் சமீபகாலமாக வலுக் கட்டாயமாக விருப்ப ஓய்வு அளிக்  கப்பட்டு குடியிருப்புகள் காலி  செய்யும் நிலைக்கு தொழிலாளர் கள் தள்ளப்பட்டனர். இந்நிலையில் மாஞ்சோலை பகுதியை  சார்ந்த ஸ்டாலின் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடுத்த   வழக்கில் ஆஜராகிய மூத்த வழக்க றிஞர் லஜபதிராய், நான்கு தலை முறைகளாக வாழ்ந்து வரும் தேயிலை தோட்ட தொழிலாளர் களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க  வேண்டும் என்றும்,  டான்சி போன்ற  அமைப்புகள் மூலமாக இவர்களின்  வாழ்வாதாரத்திற்கு ஏதாவது ஒரு வகையில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் கலைஞரின்  கனவு திட்டத்தில் இலவச வீடு வீட்டு  மனை அளிக்க வேண்டும் என்றும்  மறு பணி கிடைக்கும் வரை மாதம்  பத்தாயிரம் உறுதி தொகை வழங்க  வேண்டும் என்றும் மேலும் குழந்  தைகளுக்கு இலவச கல்வி உயர் கல்வி படிப்பிற்கு உறுதி செய்திட வேண்டும் என்றும் இங்கு வேலை செய்த தொழிலாளர்களுக்கு ஏற் றார்போல் ஏதாவது  ஒரு பணி வணங்கிட வேண்டும் என்றும் வாதிட்டார் .

இதை விசாரித்த உயர்நீதிமன்ற  மதுரை கிளை நீதியரசர் ஜி ஆர் சுவாமிநாதன் மற்றும் மகாதேவன் அடங்கிய அமர்வு  தேயிலை  தோட்ட தொழிலாளர்களுக்கு மறு வாழ்வு அமையும் வரை அவர் களின் வாழ்விடத்தை விட்டு வெளி யேற்ற தடை விதித்து புதனன்று  பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளனர். இந்தத் தீர்ப்பினால் மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர் கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர்கள் தங்கமாள், அமுதா, அமல அற்புதராஜ், மதி செல்வம் உள்ளிட்டோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு அலுவலகத்தில், புதனன்று மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணனை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து மற்றும் குதிரைவெட்டி ஆகிய தேயிலைத் தோட்டங்கள் அமைந்துள்ள பகுதிகளை, தேயிலை தோட்டக் கழகத்தின் கீழ் தமிழ்நாடு அரசே ஏற்று, தங்களின் வாழ்வாதாரத்தை உறுதிசெய்வதற்கு உரிய தலையீடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இச்சந்திப்பின் போது மாநிலச் செயற்குழு உறுப்பினர் க. கனகராஜ், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி. செல்வா ஆகியோர் உடனிருந்தனர்.