தூத்துக்குடி, டிச.22- தூத்துக்குடி மாவட்ட த்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதி களை 2 வது நாளாக வெள்ளியன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள், டிசம்பர் 17, 18 தேதிகளில் பெய்த அதிகனமழையின் காரணமாக, 1923ஆம் ஆண்டுக்குப் பிறகு 100 ஆண்டுகளில் இல்லாத வரலாறு காணாத வெள்ளப் பாதிப்பு களை சந்தித்துள்ளன.
தூத்துக்குடி மாவட்டத்தில்
95 செ.மீ., அளவிற்கு கொட்டித் தீர்த்த கனமழையால் ஆயிரக்கணக்கான குடி யிருப்புக்கள் வெள்ளத்தில் மூழ்கியிருப்பது டன், குடிசைகள் பல இடிந்தும் வீட்டுஉபயோகப் பொருட்கள், வாகனங்கள், கால்நடைகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டும் பாதிப்பை ஏற்படுத்தி யுள்ளன. பல ஆயிரம் ஏக்கரில் பயிரி டப்பட்டிருந்த நெல், கம்பு, பாசிப்பயிர், வாழைகள் முற்றாக அழிந்துள்ளன.
இந்நிலையில் கடந்த வியாழக் கிழமை முதல் இரண்டு நாட்களாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கி மக்களுக்குத் தேவைப்படும் உதவிகள் குறித்து கேட்டறிந்தார்.
வெள்ளிக்கிழமை, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள முத்தையாபுரம் அடுத்த கோவளம் மீனவ கிராம மக்கள் தங்கியுள்ள முகாமி னைப் பார்வையிட்டார், அதனைத் தொடர்ந்து பழையகாயல், உமரிக்காடு, ஏரல் உள்ளிட்ட பகுதிகளுக்கும் சென்று பார்வையிட்டார்.
இந்நிகழ்வின்போது கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.நூர்முகம்மது, தூத்துக்குடி மாவட்ட செயலாளர் கே.பி.ஆறுமுகம், மாநிலக்குழு உறுப்பினர் பி.பூமயில், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ரவீந்திரன், பேச்சிமுத்து, அப்பாதுரை, தூத்துக்குடி புறநகர் செயலாளர் பா.ராஜா, திருவைகுண்டம் செயலா ளர் நம்பிராஜன், கோவில்பட்டி தெய் வேந்திரன், எட்டயபுரம் ஜீவராஜ் உள்ளிட்ட தலைவர்கள் உடன் இருந்த னர்.