தூத்துக்குடி, ஜூலை 22 - தேசிய அளவி லான பாரா தடகள விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திற னாளி மாணவர் களுக்கு மாவட்ட ஆட்சி யர் கோ.லட்சுமிபதி, பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
கர்நாடகா மாநிலத்தில் நடைபெற்ற 13 ஆவது தேசிய அளவிலான பாரா தடகள விளையாட்டுப் போட்டிகளில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் கலந்துகொண்டு விளையா டினர்.
அதில், 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்ற முகம்மது நசீர், வட்டு எறிதல் மற்றும் ஈட்டி எறிதல் போட்டியில் மூன்றாம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்ற பொன்.மோனிஷா, ஈட்டி எறிதல் போட்டியில் மூன்றாம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்ற பேபிஷாலினி, குண்டு எறிதல் போட்டியில் மூன்றாம் இடம் பிடித்து வெண் கலப் பதக்கம் வென்ற ஷாய் ஜெரிக்கா ஆகி யோரை மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.