திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் ஆலங்குடி சுவாமி மஹால் திருமண அரங்கில் சிபிஎம் திருவாரூர் மாவட்டக் குழு உறுப்பினர் கே.சுப்பரமணியன் - எஸ்.மைனாவதி தம்பதியின் மகள் எஸ்.புவனேஷ்வரி - ஆர்.ராஜேஷ்கண்ணன் ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி தலைமையேற்று மணமக்களை வாழ்த்தி பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.எஸ்.கலியபெருமாள், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.தம்புசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். வலங்கைமான் ஒன்றிய செயலாளர் என்.ராதா மற்றும் மாவட்ட செயற்குழு, மாவட்டக்குழு, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மணமக்களை வாழ்த்தினர்.